வழிபாடு

சந்திரகிரி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

Published On 2024-04-18 03:32 GMT   |   Update On 2024-04-18 03:32 GMT
  • வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
  • பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றமும் நடந்தது.

திருமலை:

திருப்பதி மாவட்டம் சந்திரகிரி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணமும், நேற்று காலை 9.05 மணியில் இருந்து 10 மணி வரை விருஷப லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றமும் நடந்தது.

அதைத்தொடர்ந்து ராமநவமியான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை உற்சவர் கோதண்டராமர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சீனிவாசலு, கோவில் ஆய்வாளர் ஹரிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News