ஆன்மிகம்
குலசை முத்தாரம்மனுக்கு விரதம் இருந்து மாலை போடும் மரபு
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் விரதம் இருந்து மாலை அணிகிறார்கள்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் விரதம் இருந்து மாலை அணிகிறார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆதி காலத்தில் இருந்தே கடை பிடிக்கும் பழக்கம் அல்ல. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழக்கம்தான்.
ஒரு தடவை குலசை கோவில் தசரா திருவிழா வுக்கு வந்த குறவர் இனத்தவர்கள் தங்கள் தயாரிப்பான பாசி மணி மாலைகளை விற்பதற்காக, ‘இந்த மாலையை வாங்கிச் சென்று கடல் தண்ணீரில் சுத்தம் செய்து ஆலயத்தில் வழிபாடு செய்து அணிந்தால் நினைத்தது நடக்கும்’ என்றனர்.
அதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்தனர். அதன் பிறகே குலசை பக்தர்கள் மாலை அணியும் புதிய மரபு ஏற்பட்டது.
காப்பு கட்டி வேடம் அணிவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்பு கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்போதுதான் அன்னையின் பேரருளை பரிபூரணமாய் வேடம் அணிவோர் அடைய முடியும்.
* வேடம் அணிபவர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்புக்கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும்.
* வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்கவேண்டும்.
* வேடம்அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.
* வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது.
* காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது 50 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்க வேண்டாம்
விரதம் இருந்து காப்பு கட்டி வேடம் அணிந்த பக்தர்கள் நள்ளிரவில் மகிசாசூரசம்காரம் முடிந்த பின் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. தங்களது சொந்த ஊருக்கு செல்லலாம். அன்னை முத்தாரம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களில் காப்பு அவிழ்த்து கொள்ளலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் ஓத்துழைக்க வேண்டும்.
ஒரு தடவை குலசை கோவில் தசரா திருவிழா வுக்கு வந்த குறவர் இனத்தவர்கள் தங்கள் தயாரிப்பான பாசி மணி மாலைகளை விற்பதற்காக, ‘இந்த மாலையை வாங்கிச் சென்று கடல் தண்ணீரில் சுத்தம் செய்து ஆலயத்தில் வழிபாடு செய்து அணிந்தால் நினைத்தது நடக்கும்’ என்றனர்.
அதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்தனர். அதன் பிறகே குலசை பக்தர்கள் மாலை அணியும் புதிய மரபு ஏற்பட்டது.
காப்பு கட்டி வேடம் அணிவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
தசரா திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மனின் அருள் வேண்டி காப்பு கட்டி வேடம் அணிவோர் கீழ்க்கண்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்போதுதான் அன்னையின் பேரருளை பரிபூரணமாய் வேடம் அணிவோர் அடைய முடியும்.
* வேடம் அணிபவர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்புக்கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும்.
* வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனிதத்தன்மையை பேணிப் பாதுகாக்கவேண்டும்.
* வேடம்அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.
* வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது.
* காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது 50 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்க வேண்டாம்
விரதம் இருந்து காப்பு கட்டி வேடம் அணிந்த பக்தர்கள் நள்ளிரவில் மகிசாசூரசம்காரம் முடிந்த பின் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. தங்களது சொந்த ஊருக்கு செல்லலாம். அன்னை முத்தாரம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களில் காப்பு அவிழ்த்து கொள்ளலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் ஓத்துழைக்க வேண்டும்.