கிரிக்கெட்

3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் பட்டியல் வெளியீடு

Published On 2022-06-08 12:18 GMT   |   Update On 2022-06-08 12:18 GMT
  • டி.என்.பி.எல். முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
  • ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சென்னை:

2022ம் ஆண்டுக்கான டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ரசிகர்கள் போட்டிகளை காண முடியாத நிலையில், இந்த ஆண்டு பல்வேறு ஏற்பாடுகளுடன் பிரமாண்டமான நெல்லை கிரிக்கெட் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களின் பட்டியல் டி.என்.பி.எல் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கெளசிக் காந்தி கேப்டனாக செயல்படவுள்ளார். மேலும் அந்த அணியில் அலெக்சாண்டர், அருண், அருண் குமார், ஹரிஷ் குமார், ஜெகதீசன், ஜெகன்நாத் ஸ்ரீனிவாஸ், கவுசிக் காந்தி, நிலேஷ் சுப்பிரமணியம், பிரசித் ஆகாஷ்,ராதாகிருஷ்ணன், ராகுல், சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், சசிதேவ், சதீஷ், சித்தார்த், சோனு யாதவ், சுஜய், விஜய் குமார், கார்த்திக், மதன் குமார் ஆகிய 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தொடரின் இறுதிப் போட்டி கோவையில் ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News