கிரிக்கெட்

அகமதாபாத்தில் 14-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டி: 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Published On 2023-10-12 06:08 GMT   |   Update On 2023-10-12 06:08 GMT
  • போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை தர உள்ளனர்.
  • தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் டிரோன் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற 14-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.

இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. போட்டி அன்று அகமதாபாத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள். போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை தர உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. 7 ஆயிரம் போலீசார் மற்றும் 4 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் மைதானத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் டிரோன் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

Tags:    

Similar News