கிரிக்கெட்

2023 ஐசிசி ஒருநாள் அணியில் 6 இந்திய வீரர்கள்- கேப்டன் யார் தெரியுமா?

Published On 2024-01-23 13:51 GMT   |   Update On 2024-01-23 13:51 GMT
  • 2023-ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார்.
  • தென் ஆப்பிரிக்கா அணியில் 2 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

2023 காலண்டர் வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் அசத்திய 11 பேர் கொண்ட கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்தியாவின் ரோகித் சர்மாவை ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த வருடம் 1255 ரன்களை 52 என்ற சராசரியில் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரோகித்தை தங்களுடைய அணியின் கேப்டன் மற்றும் முதல் துவக்க வீரராக ஐசிசி அறிவித்துள்ளது.

ரோகித்தின் தொடக்க ஜோடியாக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வாகியுள்ளார். 3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், 4-வது இடத்தில் விராட் கோலி உள்ளார். உலகக் கோப்பையில் மட்டும் 765 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருது வென்ற அவர் சச்சினை முந்தி 50 ஒருநாள் சதங்கள் அடித்த முதல் வீரராக வரலாறு படைத்ததை மறக்க முடியாது என ஐசிசி கூறியுள்ளது.

5-வது இடத்தில் நியூசிலாந்தின் டாரில் மிட்செல் மற்றும் 6-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாசனும் (விக்கெட் கீப்பர்) 7-வது இடத்தில் அதே அணியின் ஆல் ரவுண்டர் மார்கோ யான்சென் இடம் பிடித்துள்ளனர். 8-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

9, 10, 11-வது இடங்கள் முறையே இந்தியாவின் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி தேர்வாகியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டார்ல் மிட்சேல், ஹென்றிச் க்ளாஸென், மார்கோ யான்சென், ஆடம் ஜாம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி

Tags:    

Similar News