ராஜபக்சா அதிரடி- கொல்கத்தா அணிக்கு 192 இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
- கொல்கத்தா தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டு வீழ்த்தினார்.
- 32 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய ராஜபக்சே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் - தவான் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.
அடுத்து வந்த ராஜபக்சா தவானுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதனால் 10 ஓவரில் பஞ்சாப் அணி 100 ரன்களை தொட்டது. 32 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய ராஜபக்சே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதனை தொடந்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே தவான் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டும் உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, நரேன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.