கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிராக அதிக சதம்.. வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்

Published On 2024-02-23 12:24 GMT   |   Update On 2024-02-23 12:24 GMT
  • இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் ஜோ ரூட் சதம் விளாசினார்.
  • 4-வது டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302 ரன்கள் குவித்தது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனையடுத்து ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 100 அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் சதம் அடித்து அசத்தினார்.

இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்னவென்றால் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்களில் ரூட் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக அவர் 10 சதங்களை விளாசியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக அதிக விளாசி வீரர்களில் 2 முதல் 5 இடங்கள் முறையே ஸ்டீவ் ஸ்மித் (9 சதம்), கேரி சோபர்ஸ் (8 சதம்), வில் ரிச்சார்ட் (8 சதம்), ரிக்கி பாண்டிங் (8 சதம்) ஆகியோர் உள்ளார்.

Tags:    

Similar News