கிரிக்கெட் (Cricket)
10 ஆம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரோகித் சர்மா
- ரோகித் சர்மா 2015 ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார்.
- இந்த தம்பதிக்கு சமைரா என்ற பெண் குழந்தையும் ஆஹான் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தையும் 2024 இல் ஆஹான் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.
நேற்று ரோகித் சர்மா - ரித்திகா தம்பதி தங்களது 10 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில், தங்களது திருமண நாளை இருவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை ரோகித் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.