கிரிக்கெட் (Cricket)

பாண்ட்யா தனது ஒரிஜினல் அணிக்கு செல்ல விரும்பினார்- குஜராத் அணியின் இயக்குனர் ஓபன் டாக்

Published On 2023-11-27 19:40 IST   |   Update On 2023-11-27 19:40:00 IST
  • ஹர்திக் தன்னுடைய ஒரிஜினல் அணியான மும்பைக்கு திரும்ப வேண்டும் என எங்களிடம் தெரிவித்தார்.
  • பாண்ட்யா முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பி உள்ளார். புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா தனது ஒரிஜினல் அணியான மும்பை இந்தியன்க்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாக குஜராத் அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

குஜராத் அணியின் முதல் கேப்டனான ஹர்திக், இரண்டு சீசனிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் தன்னுடைய ஒரிஜினல் அணியான மும்பைக்கு திரும்ப வேண்டும் என எங்களிடம் தெரிவித்தார்.

அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். மேலும் அவரது எதிர்கால முயற்சிகளில் அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News