கிரிக்கெட்
அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் அபாரம்: தென் ஆப்பிரிக்காவை 116 ரன்களில் சுருட்டியது இந்தியா
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஜோகனஸ்பெர்க்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் ஆடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். குறிப்பாக, அர்ஷ்தீப் சிங் முன்னணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.