சென்னை ஆல்ரவுண்டர் விளையாட்டை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்- ஹர்பஜன் சிங்
- அவர் பேட்டிங்கில் கொஞ்சம் மேலே இறக்கப்படுவார்.
- பவுலிங்கிலும் அவரது 4 ஓவர்கள் மிக முக்கியமாக இருக்கும்.
ஐபிஎல் 16-வது சீசன் இன்று தொடங்குகிறது. அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், இந்த சீசனில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது:-
இந்த சீசனில் நான் பார்க்க ஆவலாக இருக்கும் வீரர் ரவீந்திர ஜடேஜா. அவர் சிஎஸ்கேவிற்காக எப்படி பேட்டிங் ஆடப்போகிறார் என்பதை பார்க்க விரும்புகிறேன்.
அவர் பேட்டிங்கில் கொஞ்சம் மேலே இறக்கப்படுவார். பவுலிங்கிலும் அவரது 4 ஓவர்கள் மிக முக்கியமாக இருக்கும். இப்போதைய சூழலில் சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட சிறந்த ஆல்ரவுண்டர் யாருமே இல்லை.
என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அபாரமாக பேட்டிங் ஆடி செம ஃபார்மில் இருக்கிறார் ஜடேஜா. எனவே சிஎஸ்கே அணிக்காக அவர் எப்படி ஆடப்போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.