கிரிக்கெட்

அவர் தான் பிரச்சினையே.. இந்திய வீரர் குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கருத்து

Published On 2024-02-10 13:59 GMT   |   Update On 2024-02-10 13:59 GMT
  • சிறந்த அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசி இருக்கிறார்.
  • மூன்றாவது இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிரணிக்கு பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கிளப் பிரையர் ஃபயர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் வாகன், இந்திய இளம் வீரரான ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு பிரச்சினையாக உள்ளார் என்று தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "இங்கிலாந்து அணிக்கு அவர் பிரச்சினை என்று நான் சொல்வேன். அவர் நம்பவே முடியாத வீரர். நான் அவரை மும்பையில் சந்தித்தேன், மறுநாளே அவர் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசினார். தற்போது அவர் உலகின் சிறந்த அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசி இருக்கிறார்," என்று தெரிவித்தார்.

 


இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய மூன்றாவது இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக வினோத் காம்ப்ளி தனது 21 ஆண்டுகள் 35 நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 224 ரன்களை விளாசினார்.

இவரை தொடர்ந்து சுனில் கவாஸ்கர் தனக்கு 21 ஆண்டுகள் 283 நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 220 ரன்களை விளாசினார். இவர்கள் வரிசையில் தற்போது ஜெய்ஸ்வால் தனது 22 ஆண்டுகள் 37-வது நாளில் இரட்டை சதம் விளாசியுள்ளார். 

Tags:    

Similar News