கிரிக்கெட்

இந்திய அணி

இந்தியா-நியூசிலாந்து இடையே இன்று 3வது ஒருநாள் போட்டி- மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு

Published On 2022-11-30 00:20 GMT   |   Update On 2022-11-30 00:20 GMT
  • முதல் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து முன்னிலை.
  • இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹேமில்டனில் நடைபெற்ற 2-வது போட்டி மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது இதனிடையே, கிறிஸ்ட்சர்ச் பகுதியில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Tags:    

Similar News