சினிமா

சூர்யாவின் என்ஜிகே படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

Published On 2019-05-20 03:43 GMT   |   Update On 2019-05-20 03:43 GMT
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படம் வருகிற மே 31-ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞராக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


சமீபத்தில் வெளியான படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்த அரசியலும், பாடல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு ட்விட்டர் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளளது.


படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான உரிமையை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் கைப்பற்றியிருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

Tags:    

Similar News