சினிமா

மீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்

Published On 2018-10-22 05:41 GMT   |   Update On 2018-10-22 06:06 GMT
நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாருக்கு, நடிகர் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தி உள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja
நடிகர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பெங்களூருவை சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டி இருக்கிறார். முன்னணி நடிகரான அர்ஜூன் மீது பாலியல் புகார் எழுந்துள்ள இந்த சம்பவம், சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த பாலியல் புகார் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

அர்ஜூன் மூத்த நடிகர் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஆனால் பாலியல் புகார் கூறியுள்ள அந்த பெண், இவ்வளவு நாட்கள் தனக்கு ஏற்பட்ட அவமானம், காயத்தை, தனக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த வலியை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. தன் மீதான பாலியல் புகாரை அர்ஜூன் புறம்தள்ளினாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இது அவரது பெருந்தன்மையை காட்டும்.



பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது ‘மீ டூ’ இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது அடுத்து வரும் காலத்தில் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முடிவு கட்டட்டும்.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja #Prakashraj

Tags:    

Similar News