சினிமா

மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா

Published On 2018-07-21 06:06 GMT   |   Update On 2018-07-21 06:06 GMT
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Seemaraja
பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடக்க மதுரையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறும்போது,

" மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துவது என முடிவு செய்தோம். இந்த படத்தின் மையக் கதை, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியின் கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, முடிவு செய்தோம். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன் " இவ்வாறு கூறினார். `

முன்னதாக படத்தில் இருந்து `வாரேன் வாரேன் சீமராஜா' என்ற சிங்கிள் வருகிற ஜூலை 25-ஆம் வெளியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படம் வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Seemaraja #Sivakarthikeyan

Tags:    

Similar News