பைக்

ஹோண்டா, யமஹா, சுசுகி மற்றும் கவாசகி இடையே கூட்டணி - எதற்கு தெரியுமா?

Published On 2023-05-20 14:37 GMT   |   Update On 2023-05-20 14:37 GMT
  • உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன.
  • கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களாக ஹோண்டா, யமஹா, சுசுகி மற்றும் கவாசகி விளங்குகின்றன. நான்கு நிறுவனங்களும் சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நான்கு முன்னணி நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த கூட்டணி மூலம் ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் என்ஜின்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளன. கூட்டணியின் அங்கமாக அரசு அனுமதி பெற்று HySE (Hydrogen small mobility & engine technology) பெயரில் ஆய்வு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

 

ஜப்பானை சேர்ந்த நான்கு நிறுவனங்களும் ஆற்றலை உருவாக்கும் ஒரே திறன், சூரியசக்தி மட்டும் தான் என்று நம்புவதற்கு எதிராக உள்ளன. உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன. ஆனால், இதற்கான மாற்று நிச்சம் உள்ளது. அதற்கு ஹைட்ரஜன் தான் பதில் என்று HySE உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஹோண்டா நிறுவனம் ஹைட்ரஜன் சார்ந்த என்ஜின்களின் மாடல் வளர்ச்சி பிரிவில் ஆய்வு செய்கிறது. சுசுகி நிறுவனம் இதற்கான சாத்தியக்கூறு, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்கிறது.

யமஹா நிறுவனம் ஹைட்ரஜன் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க் பிரிவில் கவனம் செலுத்துகிறது. கவாசகி நிறுவம் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க், ஃபியூவல் டேன்க் மற்றும் இன்ஜெக்டர்களை இன்ஸ்டால் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. டொயோட்டா நிறுவனமும் இந்த கூட்டணியில் பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளை செய்து உதவ இருக்கிறது. 

Tags:    

Similar News