ஆட்டோமொபைல்

400 பேர் முன்பதிவு செய்து மூன்று மாதங்களுக்கு விற்றுத்தீர்ந்த ஹோன்டா மோட்டார்சைக்கிள்

Published On 2019-02-12 11:24 GMT   |   Update On 2019-02-12 11:24 GMT
ஹோன்டா டூ வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த CB300R மோட்டார்சைக்கிளை இதுவரை 400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HondaCB300R #Motorcycle



ஹோன்டா டூ வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட CB300R மோட்டார்சைக்கிளை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஹோன்டா மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஜனவரி மாத துவக்கத்தில் துவங்கியது.

புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள் ஜப்பான் நிறுவன பிராண்டின் முதல் நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே மோட்டார்சைக்கிள் ஆகும். பெயருக்கு ஏற்றார்போல் புதிய மோட்டார்சைக்கிள் முற்றிலும் வித்தியாச வடிவமைப்பை கொண்டிருக்கிறது.



தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளை வாங்க இதுவரை சுமார் 400 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிள் முதல் மூன்று மாதங்களுக்கு விற்றுத் தீர்நதுள்ளது. இதனால் ஹோன்டா CB300R வாங்க விரும்புவோர் மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளில் 286சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். மற்றும் 27.5 என்.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. 

இத்துடன் ஃபுல்-எல்.இ.டி. ஹெட்லேம்ப் யூனிட் சேர்க்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை பின்புறம் மோனோஷாக் மற்றும் முன்பக்கம் அப்சைடு-டவுன் ஃபோர்க்கள் வழங்கப்பட்டிருக்கிறது. பிரேக்கிங் வழங்க இரு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய CB300R மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், கவாசகி நின்ஜா 400 மற்றும் யமஹா YZF-R3 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
Tags:    

Similar News