ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-12.09.25

Published On 2025-09-12 05:20 IST   |   Update On 2025-09-12 05:20:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியம் இன்று துரிதமாக நடைபெறும்.

ரிஷபம்

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். வியாபாரப் போட்டிகள் அகலும்.

மிதுனம்

மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.

கடகம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கவனம் தேவை.

கன்னி

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் பங்குதாரர்களால் தொல்லையுண்டு.

துலாம்

சொத்து பிரச்சனை சுமூகமாக முடியும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். தொலைபேசி வழி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர்.

தனுசு

சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

மகரம்

புகழ் கூடும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர்.

கும்பம்

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

மீனம்

அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிட்டும் நாள். போட்ட திட்டங்கள் நிறைவேறலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வரன்கள் வாயில் தேடிவரலாம்.

Tags:    

Similar News