ராசிபலன்

2025 புரட்டாசி மாத ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

Published On 2025-09-17 09:24 IST   |   Update On 2025-09-17 09:24:00 IST
  • உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு.
  • வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பர்.

சிம்ம ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே சுக்ரனும், கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். சப்தம ஸ்தானத்தில் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். உணவில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. கும்பத்தில் ராகு இருப்பதால் பொருளாதார நிலை திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும். மனதில் இனம்புரியாத கவலை மேலோங்கும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபச் செலவுகளை செய்வது நல்லது.

துலாம் - புதன்

புரட்டாசி 13-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். வெற்றிச் செய்திகள் வீடுதேடி வரும். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வார்கள். அவர்களோடு ஏற்பட்ட பனிப்போர் அகலும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். தொழில் நடத்துபவர்கள் 'புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளலாமா?' என்பது பற்றி சிந்திப்பர். அதிக மூலதனம் போடுவதற்காக, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். வீடு வாங்கும் யோகம் அல்லது இடம் வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராக, மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

கடக - குரு

புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால், சுப விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதடைந்த பிள்ளைகள் இருந்தால் அவர் களின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பெற்றோரின் மணிவிழாக்கள், பவளவிழாக்கள் சிறப்பாக நடைபெற வழிபிறக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு, புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குருவின் பார்வைக்கு அதிக பலன் உண்டு. அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். தாய் வழி ஆதரவு உண்டு. பிறரை சார்ந்திருப்பவர்கள் தன்னிச்சையாக இயங்கக்கூடிய நேரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகள், வேண்டிய சலுகைகளைக் கொடுப்பர். இலாகா மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 'உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே' என்று நினைத்தவர்களுக்கு, புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. கண்டகச் சனி வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் குடும்பப் பிரச்சினைகள் கூடுதலாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. எதிரிகளின் பலம் கூடும். தொழிலில் லாபம் வந்தாலும், அது கைக்கு கிடைப்பது அரிது. முன்னேற்றப் பாதையில் சில குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். அவற்றில் இருந்து விடுபட சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனி கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு கொடுக்கல் - வாங்கல் சிறப்பாக இருக்கும். சுபச்செலவு அதிகரிக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 22, 26, 27, அக்டோபர்: 8, 9, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

கன்னி ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்று, விரயாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே வருமானம் ஒருபுறம் வந்தாலும், விரயங்கள் மறுபுறம் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்றுவர வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடலாம். 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றமும், இடமாற்றமும் வருவதற்கான அறிகுறி தென்படும்.

துலாம் - புதன்

புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும்போது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். வீடு வாங்குவதோ, வீடு கட்டுவதோ போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். 'கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் 'வேலையில் இருந்து விடுபட்டு, சுயமாக ஏதேனும் செய்யலாமா?' என்று சிந்திப்பார்கள்.

கடக - குரு

புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் உச்சம்பெறுவது நன்மைதான். என்றாலும் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றிருப்பதால் குடும்ப பிரச்சினை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் உருவாகி மனக்கலக்கம் ஏற்படும். பெற்றோர் வழியில் வாழ்க்கைத் துணையின் உத்தியோகம் சம்பந்தப்பட்ட கவலை மேலோங்கும். என்ன இருந்தாலும் குருவின் பார்வைக்கு பலம் அதிகம் என்பதால், ஒருசில காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு அகலும். பூர்வீகச் சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடும்.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழு வதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. 6-க்கு அதிபதி வக்ரம்பெறுவது நன்மைதான். என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் சனி அதிபதியாக விளங்கு வதால் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். சொத்துக்களால் பகை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்துகொண்டே இருக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை கிட்டும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 24, 25, 29, 30, அக்டோபர்: 10, 11, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

துலாம் ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் விரய ஸ்தானாதிபதி புதன் விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே வருமானம் திருப்தி கரமாக இருந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். அதிகப் பயணங்களால் அலைச்சலும், மன அமைதிக் குறைவும் ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காத நேரம் இது. குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். என்றாலும் அதுவரை மனக்குழப்பம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம்.

துலாம் - புதன்

புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்கிய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், உங்கள் ராசிக்கு வரும் பொழுது சில நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். குறிப்பாக தொழில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வு, ஊதியம் எதிர்பார்த்தபடி கிடைத்தல், அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் போன்றவை படிப்படியாக நடைபெறும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்வை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றிய சி்ந்தனை அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்றுக்கொள்ளும் விதம் அமையும். பிள்ளைகளின் வேலை அல்லது படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

கடக - குரு

புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு குரு வருகிறது. 10-ல் குரு வந்தால் பதவி மாற்றம் உருவாகும் என்பது நியதி. அதற்காக பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. சகாய ஸ்தானாதிபதியான அவர் உச்சம் பெறும்பொழுது எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறை வேறும். மதிப்பும், மரியாதையும் உயரும். ஆனால் நீங்கள் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து, எப்போதும் நேர் மறைச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.

குருவின் பார்வை பலத்தால் குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் வராவிட்டாலும், வந்த மாற்றம் நல்ல மாற்றமாகவே அமையும். கூட்டு முயற்சியில் இருந்து விடுபட்டு தனித்து இயங்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அந்த எண்ணமும் ஈடேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. சுக ஸ்தானாதிபதியான அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலனில் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் மனக்கவலையும், விரயங்களும் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினை அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் சனிக்கிழமை விரதமும், சனீஸ்வர வழிபாடும் நன்மையைத் தரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். பெண்களுக்கு பிள்ளைகளால் விரயம் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 17, 20, 26, 27, 28, அக்டோபர்: 3, 4, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

விருச்சிக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். லாபாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 'புத ஆதித்ய யோக'த்தோடு மாதம் பிறக்கிறது. எனவே பொருளாதார நிலை உயரும். வெற்றிக் குரிய தகவல் வீடு தேடி வரும். தொழில் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் கூட்டு முயற்சியால் பல நல்ல காரியங்களை நடத்திக் காட்டுவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரியும் மாதம் இது.

துலாம் - புதன்

புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி புதன் 12-ம் இடத்திற்கு வரும்போது, 'விபரீத ராஜயோகம்' செயல்படப் போகிறது. மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். கல்வி, கலை சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். நாலாபுறமும் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமும், சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவலும் வந்துசேரும். வீடு வாங்குவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்ற நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். மகத்தான பதவி கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகளும், சுபச்செய்திகளை கேட்கும் சூழலும் உண்டு.

கடக - குரு

புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு அதிசார கதியில் செல்கிறார். அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். தன ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான அவர் உச்சம் பெறும் இந்த நேரம் உன்னதமான நேரமாகும். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். குருவின் பார்வை முழுமையாக உங்கள் ராசியில் பதிவதால் வருமானம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக வரும். புதிய ஒப்பந்தங்களும் வந்து கொண்டே இருக்கும். வெற்றிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு, பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு.

சனி வக்ரம்

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அர்த்தாஷ்டம சனியான அவர் வலிமை இழக்கும் இந்த நேரத்தில் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வாகன மாற்றம் செய்யும் முயற்சி கைகூடும். வருமானம் உயரும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. சனி பகவான் வழிபாடு சந்தோஷம் தரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், புகழ் சேரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வாரிசுகளுக்கு சுபகாரியங்கள் நடைபெறும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 18, 19, 22, 23, 29, 30, அக்டோபர்: 5, 6, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

Tags:    

Similar News