ஆன்மிக களஞ்சியம்

திருச்செந்தூரில் தீர்த்தமாடுங்கள்

Published On 2023-09-26 11:42 GMT   |   Update On 2023-09-26 11:42 GMT
  • சாஸ்தாவை வெறும் வயிற்றுடன் வணங்கக்கூடாது என்பது மரபு.
  • மதிய வேளைக்குள் சாஸ்தாவுக்கு பாயாசம் படைக்க வேண்டும்.

உத்திர நட்சத்திரத்தில் பிறந்த திருமணம் ஆகாத பெண்களும், திருமணத்துக்குப் பிறகு பொருளாதார அல்லது மனரீதியாகத் துயரப்படும் பெண்களும்

பங்குனி உத்திரம் தினத்தன்று திருச்செந்தூர் சென்று நாழிக்கிணற்றில் நீராடி அதன் பிறகு கடலில் குளிக்க வேண்டும்.

பிறகு முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் தீராத இன்னல்களும் தீரும்.

வெறும் வயிற்றுடன் வணங்காதீர்

பங்குனி உத்திரம் நாளன்று காலையில் வழக்கமான உணவை சாப்பிட வேண்டும்.

ஏனெனில் சாஸ்தாவை வெறும் வயிற்றுடன் வணங்கக்கூடாது என்பது மரபு.

அரை வயிறுக்கு சாப்பிட்டுவிட்டு, காடுகளில் இருக்கும் சாஸ்தாவை வணங்க செல்ல வேண்டும்.

மதிய வேளைக்குள் சாஸ்தாவுக்கு பாயாசம் படைக்க வேண்டும்.

அதை மதிய உணவாகக் கொள்ளலாம். இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது.

Tags:    

Similar News