என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருப்புபட்டை அணிந்து விளையாடுவீர்களா?- தினேஷ்கார்த்திக் மவுனம்
Byமாலை மலர்10 April 2018 8:00 AM GMT
காவிரி போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய ஆட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவீர்களா? என்று நிருபர்கள் கேள்விக்கு தினேஷ் கார்த்திக் மவுனமாக சென்றுவிட்டார். #IPL #DineshKarthik
சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இதனால் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சில அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆனாலும் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டப்படி பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை- கொல்கத்தா அணிகள் இன்று இரவு சேப்பாக்கத்தில் மோதுகின்றன.
ஐ.பி.எல். போட்டிக்கு திரை உலகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, “ஐ.பி.எல். போட்டி நடக்காமல் இருந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் சென்னை அணி வீரர்கள் கறுப்பு பேட்ஜ் (பட்டை)அணிந்து விளையாடலாம்.
இதேபோல ரசிகர்களும் கறுப்பு துணி அணியலாம் என்று கூறி இருந்தார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார். அவரிடம் காவிரி போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய ஆட்டத்தில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடுவீர்களா? உங்கள் எதிர்ப்பை பதிவு செய்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது, தினேஷ் கார்த்திக் பதில் அளிக்காமல் மவுனமாக சென்றுவிட்டார்.
ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. என்னை சுற்றி பலத்த பாதுகாப்பு இருக்கிறது என்று தினேஷ்கார்த்திக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #IPL
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இதனால் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சில அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆனாலும் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டப்படி பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை- கொல்கத்தா அணிகள் இன்று இரவு சேப்பாக்கத்தில் மோதுகின்றன.
ஐ.பி.எல். போட்டிக்கு திரை உலகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, “ஐ.பி.எல். போட்டி நடக்காமல் இருந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் சென்னை அணி வீரர்கள் கறுப்பு பேட்ஜ் (பட்டை)அணிந்து விளையாடலாம்.
இதேபோல ரசிகர்களும் கறுப்பு துணி அணியலாம் என்று கூறி இருந்தார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார். அவரிடம் காவிரி போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய ஆட்டத்தில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடுவீர்களா? உங்கள் எதிர்ப்பை பதிவு செய்வீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது, தினேஷ் கார்த்திக் பதில் அளிக்காமல் மவுனமாக சென்றுவிட்டார்.
ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. என்னை சுற்றி பலத்த பாதுகாப்பு இருக்கிறது என்று தினேஷ்கார்த்திக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #IPL
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X