search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்ப்பால்"

    • விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

    வணிக ரீதியான தாய்ப் பால் விற்பனைக்குத் தடை - FSSAI அதிரடி

    உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, வணிக ரீதியாக தாய்ப்பால் விற்கப்படுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், , FSS சட்டம்- 2006 விதிமுறைகளின் படி வணிக ரீதியாக மனித பாலை பதப்படுத்துதல், விற்பனை செயதல் சட்டவிரோதமானதாகும் . எனவே, தாய்ப்பால் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வணிகமயமாக்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

     

    மேலும் விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்ப் பாலை பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.

     

    பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப் பாலை சேகரித்து லாப நோக்கத்துடன் பால் வங்கிகள் அமைத்து சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் FSSAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள பால் வங்கியில் தூய்மையான தாய்ப்பால் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும்.
    • பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம்.

    முதல்முறையாக தாயான பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும். குழந்தைகள் பிறந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளம் தாய்மார்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்யும். குழந்தையின் அழுகை, குழந்தை பராமரிப்பு வரை எதைக்கண்டாலும் மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்யும்.

    சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு மற்றுமொரு சவால் குழந்தை வளர்ப்பு தான். பல பெண்களும் குழந்தை பிறந்தவுடன் கர்ப்பகால அவஸ்தைகள் முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் தாய்மையின் பயணமே அப்போது தான் தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக முதல் முறை தாயாகியிருக்கும் பெண்கள் அவசியம் குழந்தை வளர்ப்பு பற்றி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல்:

    பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம் என்பதை மருத்துவர் குழந்தை பிறந்ததும் வலியுறுத்துவார். பிரசவித்தவுடன் குழந்தைக்கு தரக்கூடிய தாய்ப்பால் சீம்பால் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலில் குழந்தைக்கு தேவையான எதிர்ப்புசக்தி கிடைக்கும் என்பதால் முதலில் வெளிவரும் மஞ்சள் நிற பாலை குழந்தைக்கு தவிர்க்காமல் கொடுக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுக்கும் நிலை

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் உண்டு. இளந்தாய்மார்கள் அனைவருமே செவிலியர் அல்லது மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் முறையை அறிந்து சரியாக பின்பற்றும் போது தாய்ப்பால் சுரப்பும் கிடைக்கும். குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பிணைப்பும் அதிகமாகும்.

    குழந்தையின் அழுகை

    குழந்தையின் அழுகை குறித்து சரியாக தெரியாது என்றாலும் ஓரளவேனும் அதன் அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பசிக்கான அழுகை, டயப்பர் ஈர அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, தூக்கத்துக்கான் அழுகை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி குழந்தையின் அழுகை காய்ச்சல் அல்லது வேறு பிரச்சனைகளால் தீவிரமாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்துகொள்வது அவசியம்.

    குழந்தைக்கான தடுப்பூசி

    பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணையை மருத்துவரே அளிப்பார் என்றாலும் அதை அம்மாக்களும் நினைவுபடுத்தி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதை நினைவுபடுத்தி முன்கூட்டியே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    குழந்தைக்கான மருந்துகள் பிறந்த நேரத்தில் இல்லை என்றாலும் அதிக காய்ச்சல், சளி, இருமல், தாய்ப்பால் குடிக்காத காலங்களில் அவசரத்துக்கு என்ன செய்ய வேண்டும். எப்போது சிகிச்சைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதையும் ஆலோசித்து வைத்துகொள்வது நல்லது.

    குழந்தையை குளிக்கவைக்கும் முறை:

    பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் அடுத்த நாள் முதலே குளிக்க வைக்கலாம். ஆனால் அம்மாக்களால் குழந்தையை குளிப்பாட்டுவது சிரமமாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் எப்படி குழந்தையை குளிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி பெற்றோர்கள் இருவருமே தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். 

    குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை, அதன் முக்கியத்துவம், தலைகுளியல், குளிக்க வைக்கும் முறை என அனைத்தையும் கற்றுக்கொள்வது நல்லது.

    • 4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி இணை உணவுகள் கொடுக்கலாம்.
    • குழந்தை பிறந்து 7 மாதம் ஆகிவிட்டால், நன்கு மசித்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் கொடுக்கலாம்.

    பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. குழந்தைகள் வளர வளர தாய்ப்பால் மட்டுமே அவர்களது பசியைப் போக்காது. குழந்தைகள் வளர்ச்சிக்கு திட உணவுகளை கொடுக்க வேண்டும்.

    * குழந்தை பிறந்த முதல் மாதம் தாய்ப்பால் தான் முதல் உணவாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை எந்த ஒரு திட உணவுகளையும் கொடுக்கக்கூடாது. முதல் மாதத்தில் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

    * குழந்தை பிறந்த 2-வது மாதத்தில் ஒரு நாளைக்கு 7-8 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    * 3-வது மாதத்தில் தாய்ப்பால் மட்டும் போதுமானது. இந்த மாதத்தில் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

     

    * 4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி இணை உணவுகள் கொடுக்கலாம். பழச்சாறு கொடுக்கலாம். அதிலும் ஆரஞ்சு ஜூஸை குழந்தைக்கு கொடுப்பது நல்லது. பழச்சாறு வீட்டில் தயாரித்ததாக இருக்க வேண்டியது அவசியம்.

    * 5-வது மாதத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு திட உணவுகளைக் கொடுக்க வேண்டும். வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை மசித்து கொடுக்கலாம்.

    * 6-வது மாதத்தில் குழந்தை சில உணவுகளை உட்கொள்ள மறுத்தால், அந்த உணவுகளை மீண்டும் கொடுக்க வேண்டாம். இந்த மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலுடன், திட உணவுகளை கொடுக்கலாம்.

    * குழந்தை பிறந்து 7 மாதம் ஆகிவிட்டால், நன்கு மசித்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம், வேக வைத்து மசித்த காய்கறிகள் போன்றவற்றையும் கொடுக்கலாம்.

    * குழந்தை பிறந்து 8-9 மாதம் ஆகியிருந்தால், அவர்களுக்கு இதுவரை கொடுத்த உணவின் அளவை விட, சற்று அதிகமாகவே உணவுகளை கொடுக்கலாம். கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டாம். குறிப்பாக சாக்லேட், ஜூஸ், சிப்ஸ், கேக் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    * 10 மாத குழந்தைகளுக்கு வேக வைத்த காய்கறிகள், சாதம், பால், தயிர், பழங்கள் போன்ற அனைத்தையுமே கொடுக்கலாம்.

    • தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
    • பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சியை தாய்ப்பால்தான் அதிகமாக நிர்வகிக்கிறது. பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது. நோய்களை எதிர்த்து போராடும் ஆன்டிபயாடிக்குகளை வழங்குவதிலும் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடும் உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், மன ஆரோக்கியம் போன்றவை தாய்ப்பால் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

    * தாய்ப்பால் சுமார் 90 சதவீத நீரால் ஆனது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சுமார் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அல்லது பால் (அ) பழச்சாறு போன்றவற்றை குடிக்க வேண்டும்.

    * தாய்ப்பால் அதிகமாக சுரக்க பச்சை காய்கறிகள், முட்டை, பால், பூண்டு, வெங்காயம், திராட்சை சாறு, கோழி மற்றும் இறைச்சி சூப்களை சாப்பிட வேண்டும்.

    * தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க வெந்தயம், பெருஞ்சீரகம், பூண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    * தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். குழந்தை தூங்கும்போது தாயும் தூங்க முயற்சி செய்ய வேண்டும்.

    * மார்பகங்களில் எப்போதும் குழந்தைக்கு பால் சுரக்கும். குழந்தைக்கு பாலூட்டும்போது மார்பகங்களில் மேலும் பால் அளவு அதிகரிக்கும்.

    * பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது 10 நிமிடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    * குழந்தை தூங்கிவிட்டால் மெதுவாக எழுப்ப முயற்சித்து பால் கொடுக்க வேண்டும்.

    * பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள், உலோகங்களின் வீரியம் அதிகமாக இருந்தால் அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    • உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது
    • இந்த வீகன் உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

    உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. வீகன் டயட் முறையை பின்பற்றுபவர்கள் இறைச்சி உணவுகள் மட்டுமில்லாமல், கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பால், தயிர், முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள்.

    முழுக்க முழுக்க காய்கறி, பழங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் பலர் இந்த உணவு முறையை பின்பற்றுகின்றனர்.

    இந்நிலையில் ரஷ்ய நாட்டில் வீகன் டயட் முறையை பின்பற்றுவதாக கூறி, உணவு, தண்ணீர், தாய்ப்பால் என எதுவும் கொடுக்காததால் பிறந்த குழந்தை ஒன்று 1 வயது நிறைவடைவதற்குள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    வீகன் டயட் முறையை தீவிரமாக பின்பற்றும் 44 வயதான மாக்சிம் லியுட்டி, ஒரு வயதுக்கும் குறைவான மற்றும் 1.5 கிலோ எடையுள்ள தனது குழந்தைக்கு சூரிய ஒளியில் இருந்து ஊட்டச்சத்து கிடைக்கும் என்று பட்டினி போட்டுள்ளார்.

    குழந்தையின் தாயான ஒக்ஸானா மிரோனோவா (34) தனது குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க கூடாது என மாக்சிம் லியுட்டி தடுத்துள்ளார்.

    மேலும் தனது குழந்தையை வைத்து பரிசோதனை செய்த அவர், குழந்தைக்கு சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளார்.

    உணவு, தண்ணீர், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் உடல் மெலிந்த குழந்தை நிமோனியா நோயால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தனது மகனை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்தில் மாக்சிம் லியுட்டிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கடந்தாண்டு தீவிர வீகன் டயட் உரையை பின்பற்றிய 39 வயது பெண்மணி ஸன்னா சம்சனோவா பரிதாபமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யாவை சேர்ந்த அவர், உணவு தண்ணீர் எடுக்காமல் தீவிரமாக வீகன் டயர் முறையை பின்பற்றினார். இதனால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்த அவர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீகனாக இருந்து வரும் இவர் பலருக்கும் வீகன் டயட் முறையை பின்பற்றுவது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போன்றவற்றை தயார் செய்து பலருக்கும் முன்னுதாரணமாகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பிணைப்பை உருவாக்குகிறது.
    • 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

    தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. எனவே, உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மற்றும் முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது

    குழந்தை பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். பிறந்த குழந்தைக்கு தாய் குறைந்தபட்சம் கட்டாயம் ஆறு மாதமாவது தாய்ப்பால் வழங்க வேண்டும். இன்று தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காணலாம்.

     பாகற்காய்:

    பாகற்காயில் நிறைந்து காணப்படும் சபோனின்கள் மற்றும் டெர்பெனாய்டுகள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கரைக்கக் கூடியது. இது சர்க்கரை நோயுள்ள தாய்மார்களுக்கு சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும்.

    கறிவேப்பில்லை:

    ஆண்டி-ஆக்சிடன்ட் நிறைந்து காணப்படும் கறிவேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. இது இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பாஸ்பரஸ், கால்சியம், இருப்புச் சத்துக்களும் நிறைந்துள்ளன. இதுவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    தண்ணீர்:

    தாய்ப்பாலில் நீர் நிறைந்து காணப்படும் என்ற காரணத்தால், நாம் தண்ணீரை போதுமான அளவு எடுத்துக்கொள்ளாவிடில் தாய்ப்பாலின் அளவும் குறையும். ஆகையால், குறைந்தது நாளொன்றுக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

    கொண்டைக்கடலை:

    நார்சத்து, புரதம், வைட்டமின்கள் நிறைந்துள்ள கொண்டைக்கடலை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    பால்:

    கால்சியம், புரதம், கொழுப்பு, ஃபோலிக் அமிலம் நிறைந்து காணப்படும் பால், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும். அதேபோல சாலமன் மீன், தர்பூசணி, நாட்டு சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், முருங்கை கீரை, பீட்ரூட், பருப்பு போன்றவையும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும் உணவுகள் ஆகும்.

    • பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்ள முடியும்.
    • உணவு இடைவேளை மிகவும் முக்கியம்.

    பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவுதான் உணவு எடுத்துக்கொள்ள முடியும். தாய்ப்பால் கொடுத்த உடனே,குழந்தைக்கு திட உணவு கொடுத்தால் அதனால் சாப்பிட முடியாது. எனவே உணவு இடைவேளை மிகவும் முக்கியம். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்துக்கும், திட உணவு கொடுக்கும் நேரத்துக்கும் இடைவெளி தேவை.

    அதாவது, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு நேரத்தில் திட உணவுகளை கொடுக்கலாம். இடைப்பட்ட நேரத்தில், அதாவது, காலையில், முற்பகலில், மாலையில், இரவு தூங்க செல்லும் முன் தாய்ப்பால் கொடுக்கலாம். பசியானாலும் சரி, வயிறு நிறைந்துவிட்டாலும் சரி, குழந்தைகள் சில அசைவுகள் மற்றும் சத்தங்கள் மூலம் நமக்கு உணர்த்தும்.

    சாப்பாட்டை அருகில் கொண்டு போகும்போது வாயை திறக்கும். உணவின் மணம் உணர்ந்தாலே ஆர்வமாகும். சில சத்தங்களை எழுப்பி, கை அசைவுகளை காட்டி, தனக்கு இன்னும் பசிக்கிறது என்பதை உணர்த்தும். உணவு இருக்கும் இடத்தை நோக்கி நகரும் அல்லது கையை காட்டும்.

    வயிறு நிறைந்துவிட்ட நிலையில், குழந்தை உணவை ஏற்காமல், தள்ளிவிடும். உணவு கொடுக்கும்போது வாயை திறக்காமல் அடம்பிடிக்கும். உணவு இருக்கும் திசையில் இருந்து விலகி, தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளும். அசைவுகள் மற்றும் சத்தங்களின் மூலம் தனக்கு வயிறு நிறைந்துவிட்டதை உணர்த்தும்.

    திட உணவுகளை கொடுக்க தொடங்கும்போது குழந்தை, புதிய சுவைகளுக்கு பழகுகிறது. அந்த நேரத்தில் கட்டாயப்படுத்தி உணவை ஊட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்படி வற்புறுத்தி ஊட்ட ஆரம்பித்தால் குழந்தைக்கு உணவின் மீது வெறுப்பு ஏற்படலாம்.

    தனக்கு எவ்வளவு சாப்பாடு வேண்டும் என்பதை குழந்தைகளே தீர்மானிக்கட்டும். நீங்கள் கொண்டு வந்த உணவு முழுவதையும் குழந்தை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காகூடாது, நிர்பந்திக்க கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் போஷன் அபியான் திட்டத்தின் சார்பாக தாய்பால் வார விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் கீழ் போஷன் அபியான் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதாகும். குழந்தையின் முதல் 1000 நாட்கள் அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல் இரண்டு வயது வரையிலான நாட்களே அந்த குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கிறது. முதல் 1000 நாட்களில் குழந்தையின் முக்கிய உணவு தாய்ப்பால்,குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அளிக்க வேண்டிய அவசியம் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பாலூட்டலை சாத்திய மாக்குவோம்,பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம் என்ற தலைப்பின் கீழ் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்பாலின்முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் போஷன் அபியான் சார்பாக கண்காட்சி அரங்குகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இக்கண்காட்சியில் பாலூட்டும் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவுகள்,தாய்மார்கள் பாலூட்டும் முறை பற்றிய விளக்கக்காட்சி, தாய்ப்பாலின் நன்மைகள்,தானிய கலசம், உணவு பிரமிடு, கீரை வகைகள், ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி திட்டப்பணிகளால் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு, சத்துமாவினால் செய்யக்கூடிய உணவுகள், சத்துமாவு கேக், சத்துமாவு உள்ளடக்கிய பொருட்கள், இரும்புச்சத்து தேர், கால்சியம் வீடு, வளர்ச்சிப்படிகள்,காய்கறிகளால் செதுக்கப்பட்ட வடிவங்கள், முதல் 1000நாட்களின் முக்கியத்துவம் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

    இதனை அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் போஷன் அபியான் ஜன் அந்தோலன் கீழ் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான சமையல் போட்டி மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தலுக்கான போட்டி அனைத்து வட்டாரங்களிலும் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாரட்டுச்சான்றிதழ்கள் வழங்ப்பட்டது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தாய்ப்பாலூட்டலை சாத்தியமாக்குவோம், பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம் என்ற தலைப்பில் அங்கன்வாடி பணியாளர்களது பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டெல்லா மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
    • நோய் தாக்குதல் உடல் கோளாறுகள் ஏற்படுவதை தாய்ப்பால் தடுக்கும்.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,மற்றும் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் சார்பில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் ஆறுமுகம், பட்டய தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி வரவேற்றார்.இதில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி தலைமை தாங்கி பேசியதாவது:-தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சி அதிகரிக்கும். தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் மிகவும் நல்லது. இன்று பவுடர் பால்கள் அதிகரித்து விட்டன.

    பவுடர் பால் குடிக்கும் குழந்தை கொழு, கொழுவேன இருக்கும். ஆனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.தாய்ப்பாலின் எதிர்ப்பு சக்தி மிக அதிகமானது. நோய் தாக்குதல் உடல் கோளாறுகள் ஏற்படுவதை தாய்ப்பால் தடுக்கும்.பிறந்த ஆறு மாதம் வரை தாய்ப்பால் தாராளமாக கொடுக்கலாம். கர்ப்பிணிகள் காய்கறிகள், கீரைகள் பழ வகைகள் உண்பது மிகவும் நல்லது.இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்த உறுதிமொழிஎடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி தாய்ப்பால் திட்ட பொறுப்பாளர்கள் மணிகண்டன், லோக சதீஸ்வரன்,மற்றும் யுவராஜ் மகேஷ், கர்ப்பிணி பெண்கள் தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிா்ப்பு சக்தியாகவும், புத்திக்கூா்மையை வளா்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    • தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மாா்பகம், கா்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இன் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் விநாயகமூா்த்தி வரவேற்றாா்.

    குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சௌமியா, அரசு மருத்துவா் கலைச்செல்வன் ஆகியோா் பேசியதாவது:-

    குழந்தைகளின் முக்கிய உணவுப்பொருள் தாய்ப்பால். இது, குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிா்ப்பு சக்தியாகவும், புத்திக்கூா்மையை வளா்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு வயிறு, குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது. குழந்தைகளின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிா்ப்புத் தன்மையை பெருக்குகிறது.பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, காது சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மாா்பகம், கா்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்றனா்.

    நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். 

    • தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது.
    • தாய்ப்பால் குறித்து பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

    தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது... குழந்தையின் வளர்ச்சி தொடங்கி, நிமோனியா, நீரிழப்பை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பில் இருந்து காக்கும் உன்னத பணிகளைச் செய்வதுடன், அன்னைகளின் உடல்நலத்திலும் பெரும் பங்கு வகிப்பது...

    குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதால், அம்மாக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்... எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜுரம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராது என்கிற விஷயங்கள் பலரும் அறிந்தவையே. அவற்றைக் கடந்து தாய்ப்பால் குறித்து பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

    பெண்களின் உடல் கர்ப்பம் மற்றும் பிரசவம் போன்ற கால கட்டங்களில் பயங்கரமான மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் தனக்குள் வளரும் குழந்தைக்கும் சேர்த்து உண்பதால், அவர்தம் உடல் எடை அதிகரிக்கிறது; பிரசவத்தின் பொழுது நிகழும் மாற்றங்களால், சில பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கலாம்; சிலருக்கு அதிகரிக்காது இருக்கலாம். ஆனால், தாய்ப்பால் கொடுக்கும் கால கட்டம் பெண்களின் கூடிய எடையை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது; இந்த ஒரு கூற்றின் உண்மை நிலை என்ன என்று இப்பொழுது படித்து அறியலாம்.!

    தாய்ப்பால் அளிப்பது பெண்களின் எடையை குறைக்க உதவுமா என்ற கேள்விக்கு ஆம் மற்றும் இல்லை என்ற இரு விடைகளுமே பொருந்தும். எப்படி என்று கேட்கிறீர்களா? குழந்தைக்கு கொடுக்க வேண்டிய பால் உருவாக பெண்ணின் உடல் சக்தியில் 25 சதவிகிதம் பயன்படுத்த படுகிறது. மேலும் தாய்ப்பால் சுரப்பு நிகழ, பெண்கள் நல்ல சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்; அச்சமயம் பெண்களுக்கு வழக்கத்தை விட அதிகமான அளவு பசியும் எடுக்கும்.

    எனவே, இந்த தாய்ப்பால் அளிக்கும் முறையில் பெண்களின் எடை கூடவும் செய்யலாம்; குறையவும் செய்யலாம். ஆனால், இந்த நடுநிலையான ஒரு பதிலை தாண்டிய உண்மையான பதில் என்ன என்றால், அது தாய்ப்பால் அளிப்பது கண்டிப்பாக பெண்களின் உடலின் எடையை குறைய செய்கிறது என்பது தான்! உடல் எடை குறைவது, சரியாக நேர நேரத்திற்கு தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே!

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பிரசவத்துக்குப் பின் அதிகரிக்கும் எடை குறையும். பால் தரும் தருணங்களில் தாயின் உடலில் வெளிப்படும் Oxcytocin என்ற ஹார்மோன் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைய உதவுகிறது. எலும்பு தேய்வது கட்டுப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 24 சதவிகிதம் குறைவு. தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் அளிக்கும் பொழுது, குழந்தைகள் வேறு உணவு எதையும் உண்ண மாட்டார்கள்; ஆறு மாதத்திற்கு பிறகு தான் குழந்தைகளுக்கு திட உணவு வழங்கப்படும். அவ்வாறு வேறு உணவு இல்லாத, பால் மட்டும் தான் என்ற சூழலில், குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலால் ஒரு நாளைக்கு 300 முதல் 700 கலோரிகள் பெண்களின் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த அளவு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 8-12 முறை தாய்ப்பால் கொடுத்தால் மட்டுமே சரியாக குறையும்.

    குறைந்தது 400 முதல் 600 கலோரிகளாவது பெண்ணின் உடலில் இருந்து குழந்தை பால் குடிப்பதால் குறைக்கப்பட்டு விடும்; இந்த அளவு கலோரிகள் குறைய குழந்தைகள் குறைந்த பட்சம் 20 முதல் 30 அவுன்ஸ் பாலினை கண்டிப்பாக குடித்து இருக்க வேண்டியது அவசியம்..! குழந்தைகள் ஒரு அவுன்ஸ் பால் குடிப்பதால், 20 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

    பெண்களின் உடலில் இருக்கும் எடையில், பிரசவம் நிகழ்ந்து, முதன் முதலாக குழந்தை பால் குடித்ததும் 300 கலோரிகள் குறைக்கப்படும். ஏனெனில் குழந்தை அப்பொழுது தான் தாயின் வயிற்றில் இருந்து வெளி வந்து இருப்பதால், அதனால், அதிக அளவு பாலை குடிக்க முடியாது; பின்பு நாட்கள் செல்ல குழந்தைகள் குடிக்கும் பாலின் அளவு 300 முதல் 700 வரை என்ற அளவில் இருக்கும்.

    பெண்களின் உடலுக்கு சரியாக நாள் ஒன்றுக்கு 1800 முதல் 2000 வரையிலான கலோரிகள் தேவைப்படும். இதுவே குழந்தை பிறந்து பால் கொடுக்கும் சமயங்களில், குழந்தைக்கு தேவையான பால் சுரப்பு நிகழ பெண்கள் கொஞ்சம் அதிகமான கலோரிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது பெண்கள் நாள் ஒன்றுக்கு 2200 முதல் 3000 வரையிலான அளவு கலோரிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்!

    இதைத்தவிர ஒரு வருடம் வரை அல்லது அதற்கும் மேலாக குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் அன்னைக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பெண்களில் சிலருக்கு குடல் சார்ந்த சர்க்கரை நோய் இருந்தால், தாய்ப்பால் அளிப்பது டைப் 2 சர்க்கரை நோய் நிலையை ஏற்படுத்தலாம்!

    குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பொழுது, வெளியேறும் பாலின் அளவு பெண்களின் உடல் எடையை குறைக்க செய்கிறது. அது போல், கர்ப்ப காலத்தில், பிரசவம் முடிந்த சில மாதங்களில் செய்ய முடியாத, கலவியை ஒரு குறிப்பிட்ட மாதங்களை கடந்த பின் கணவருடன் சேர்ந்து செய்தால், அச்சமயம் அந்த செயலால் கூட பெண்களின் எடை குறையும்.

    தாய்மார்களுக்குக் காய்ச்சல் இருக்கும்போதும் பால் புகட்டலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தாய் நேரடியாக பாலைக் கொடுக்காமல், தனியாக எடுத்துப் புகட்டலாம். தனியாக எடுக்கப்படும் பாலை குளிர்சாதனப் பெட்டியில் ஒருநாள் முழுவதும் வைக்கலாம். அறை வெப்ப நிலையில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட பெண்களும், தகுந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்குப் பால் தரலாம். பால் கொடுக்கும் காலகட்டத்தில், தாயின் உடலில் இருந்து அதிக அளவு நீர்த்தன்மை குறையும். அதை ஈடுகட்ட, குழந்தைக்குப் பால் கொடுக்கும்போதெல்லாம் ஜூஸ், பால், மில்க்ஷேக் முதலான திரவ உணவுகளை தாய் அருந்துவது நல்லது. 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே உணவாக தரப்பட வேண்டும்.

    • தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
    • தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள்.

    60% பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

    புரொலெக்டின் ஹார்மோன் மற்றும் ஆக்சிடோசின் ஹார்மோன் சீராக இருந்தால் நன்றாக பால் சுரக்கும். இவைகளை அதிகப்படுத்தி பால் சுரப்பை மேம்படுத்த உதவும் சித்த மருந்துகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் வருமாறு:

    தண்ணீர் விட்டான் கிழங்கு அல்லது சதாவேரி பொடி அல்லது லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம். சவுபாக்கிய சுண்டி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம்.

    வெந்தயத்தை பொடித்து நல்லெண்ணெய் சேர்த்து களியாக கிண்டி காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். பூண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். அல்லது பூண்டு குழம்பு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அம்மான் பச்சரிசி இலையைக் கீரையாக சாப்பிட்டு வரவேண்டும். பெருஞ்சீரகம் பால் சுரப்பை அதிகரிக்கும். பெருஞ்சீரக டீ அல்லது பெருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடலாம்.

    பாதாம் பால் குடிக்கலாம். கருப்பட்டியில் செய்த கறுப்பு எள்ளுருண்டை சாப்பிட வேண்டும். பசலைக்கீரை, அரைக்கீரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பப்பாளிக்காயை கூட்டு வைத்து சாப்பிட வேண்டும். பால், தயிர், கேரட், கேழ்வரகு, முருங்கைக்காய், பாலாடைக்கட்டி, சுறாமீன், பாறை மீன், ஓட்ஸ் கஞ்சி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி சாறு இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தூங்க வேண்டும். இதனால் புரொலெக்டின் மற்றும் அன்புக்குரிய ஹார்மோன் ஆக்சிடோசின் இவை அதிகரித்து பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

    குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போது, சரியான நிலையில் நீங்களும் குழந்தையும் இருக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்புக்காக நீங்கள் மார்பகத்தை அவ்வபோது அழுத்தி விடுங்கள். மார்பகத்தை அளவாக பம்ப் செய்யுங்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். நீங்களும் குழந்தையும் நன்கு தூங்க வேண்டும். தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    ×