search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்ப்பாலில் உள்ள நன்மைகள்"

    • தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பிணைப்பை உருவாக்குகிறது.
    • 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

    தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. எனவே, உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மற்றும் முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது

    குழந்தை பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். பிறந்த குழந்தைக்கு தாய் குறைந்தபட்சம் கட்டாயம் ஆறு மாதமாவது தாய்ப்பால் வழங்க வேண்டும். இன்று தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காணலாம்.

     பாகற்காய்:

    பாகற்காயில் நிறைந்து காணப்படும் சபோனின்கள் மற்றும் டெர்பெனாய்டுகள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கரைக்கக் கூடியது. இது சர்க்கரை நோயுள்ள தாய்மார்களுக்கு சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும்.

    கறிவேப்பில்லை:

    ஆண்டி-ஆக்சிடன்ட் நிறைந்து காணப்படும் கறிவேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. இது இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பாஸ்பரஸ், கால்சியம், இருப்புச் சத்துக்களும் நிறைந்துள்ளன. இதுவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    தண்ணீர்:

    தாய்ப்பாலில் நீர் நிறைந்து காணப்படும் என்ற காரணத்தால், நாம் தண்ணீரை போதுமான அளவு எடுத்துக்கொள்ளாவிடில் தாய்ப்பாலின் அளவும் குறையும். ஆகையால், குறைந்தது நாளொன்றுக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

    கொண்டைக்கடலை:

    நார்சத்து, புரதம், வைட்டமின்கள் நிறைந்துள்ள கொண்டைக்கடலை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

    பால்:

    கால்சியம், புரதம், கொழுப்பு, ஃபோலிக் அமிலம் நிறைந்து காணப்படும் பால், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும். அதேபோல சாலமன் மீன், தர்பூசணி, நாட்டு சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், முருங்கை கீரை, பீட்ரூட், பருப்பு போன்றவையும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும் உணவுகள் ஆகும்.

    • மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும்.
    • மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும்.

    மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும்.

    குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும். தாய்ப்பால் புகட்டுவதால் அழகு குறையும் என்ற கருத்தில் பலரும் இப்பொழுதெல்லாம் தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கின்றனர். ஆனாலும் சர்வதேச அளவில் ஐந்து வயது குழந்தைகளில் ஒரு கோடி குழந்தைகள் வரையில் தாய்ப்பால் புகட்டப்படாமல், ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றன. ஆகவே அனைவரும் தாய்ப்பாலின் நலன்களை அறிந்து, அதை பற்றிய விழிப்புணர்வு பெறுதல் அவசியமாகிறது.

    பச்சிளம் குழந்தைக்கு தாய் பால் புகட்டுவதே சிறந்தது. அதற்கு அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மட்டும் காரணம் அல்ல, தாய்ப்பால் புகட்டுவதில் தாய்க்கும் நன்மை உண்டு. ஆறு மாதம் வரையில் குழந்தைக்கு தேவையான வைட்டமின் மற்றும் சத்துகளோடு, குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்பாலிலேயே அதிகம் இருக்கிறது.

    தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றின் போது ஏற்பட்ட இரத்த இழப்பை சரிசெய்து, அது சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

    தாய்ப்பால் புகட்டுவது தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட உடல் மாற்றங்களில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது மற்றும் குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட வலியை மறந்து, குழந்தையை மகிழ்ச்சியாக கொஞ்சவும் வழி செய்கிறது.

    தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கும், சேய்க்கும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பிணைப்பு ஏற்படும். தாய்ப்பால் புகட்டுவது மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

    ×