search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Omar Abdullah"

    • 5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ந் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி 4-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) 5-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளன.

    5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் முக்கிய வி.ஜ.பி. வேட்பாளர்களும் அடங்குவர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் 5-ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 264 பேரும், மிக குறைவாக லடாக்கில் 3 பேரும் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

    மேலும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ்கோயல், ஸ்மிரிதி இரானி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோரும் முக்கியமானவர்கள்.

    ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார்.

    உத்தர பிரதேசத்தின் லக்னோ மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதியை சேர்ந்த ரவிதாஸ் மெஹ்ரோத்ரா போட்டியிடுகிறார்.

    பிஹாரின் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஷிவ் சந்திர ராம் களத்தில் உள்ளார். பிஹாரின் சரன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் ரோகிணி ஆச்சார்யா களமிறங்கி உள்ளார்.

    நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் உள்ள 174 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 13-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 2-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேலும், கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    வாட்டர் கூலர்கள், மின்விசிறிகள், கூடாரங்கள் போன்றவற்றை பொருத்தி வாக்காளர்களை கடும் வெப்பம் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு உட்பட்ட வக்குச்சாவடிகளில் 60 ஆயிரத்துக்கும் க்கும் மேற்பட்ட மத்தியப் படை வீரர்களையும், 30 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இதை தொடர்ந்து வருகிற 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலும் நடைபெறுகின்றன. 7 கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    • கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார்.
    • 2002 சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தனது முதல் சட்டசபை தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாரமுல்லா எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில் லட்சாதிபதியான உமர் அப்துல்லாவுக்கு சொந்தமாக வீடு, நிலம், வணிக கட்டிடம், கார் அல்லது வேறு எந்த அசையா சொத்துக்களும் இல்லை என்பது அவர் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

    முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் எம்.பி.யாகவும் இருந்து வரும் ஓய்வூதியம் மட்டுமே அவரது வருமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2009-14 வரை ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியாக பணியாற்றிய உமர் அப்துல்லாவின் அசையும் சொத்து மதிப்பு ரூ.54.45 லட்சமாகும். அவரிடம் ரூ. 95 ஆயிரம் ரொக்கம் இருந்தது. வங்கிகளில் ரூ.23.48 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள விவாகரத்து முடிவால் மனைவியை பிரிந்திருப்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    அவரது வருமானம் 2019-20-ல் ரூ.7.92 லட்சம் 2020-21-ல் ரூ.11.73 லட்சம், 2021-22 ல் ரூ.10 லட்சம், 2022-23-ல் ரூ.19.39 லட்சம் மற்றும் 2023-24-ல் ரூ.13. 20 லட்சம் என்று பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

    கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். அவர் முதன்முதலில் 1998-ல் ஸ்ரீநகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 1999-ல் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    2002 சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தனது முதல் சட்டசபை தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் தோல்வி அடைந்தார். 2008-ல் சோனாவர் தொகுதியில் வெற்றி பெற்று முதல் மந்திரியானார். 2014-ல், 2 இடங்களில் போட்டியிட்டு சோனாவர் தொகுதியில் தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தார், ஆனால் மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள பீர்வா தொகுதியில் வெற்றி பெற்றார்.

    • மெகபூபா முப்தி கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் ஜம்மு காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுகிறது.
    • பா.ஜ.க.வின் 'சி' டீமாக மெகபூபா கட்சி இணைந்துள்ளது என்றார் உமர் அப்துல்லா.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தொகுதிக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாளை மறுதினம் நடைபெற உள்ள 2வது கட்ட தேர்தலில் மேலும் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசும் அங்கு இணைந்து போட்டியிடுகின்றன. இதில் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தாலும் அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.

    இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் முஷ்தாக் பஹாரி பிரசாரத்தில் பேசுகையில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு பஹாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பா.ஜ.க வேட்பாளரை விடுத்து அவர் வேறு கட்சிக்கு ஆதரவளித்தது விவாதப் பொருளானது.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இங்கே பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும். நாடு முழுவதும் விஷத்தைப் பரப்பும் சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், ஜம்மு காஷ்மீரின் 5 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும்.

    மற்ற கட்சிகள் எல்லாம் 'ஏ' டீம், 'பி' டீம் என ஏதோ ஒரு வகையில் ஒன்றிணைந்துள்ளன. அந்த வகையில் தற்போது மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் பா.ஜ.க.வில் 'சி' டீமாக இணைந்துள்ளது என தெரிவித்தார்.

    • நகரின் புறநகரில் உள்ள ராவல்போராவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார்.
    • தொகுதியில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவது கட்சியின் பொறுப்பாகும்.

    தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஸ்ரீநகரின் தற்போதைய எம்.பி.யுமான பரூக் அப்துல்லா (86) தனது உடல் நலப் பிரச்சனை காரணமாக வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டார் என அக்கட்சி இன்று தெரிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பை அவரது மகனும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, நகரின் புறநகரில் உள்ள ராவல்போராவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார்.

    இதுகுறித்து உமர் அப்துல்லா கூறுகையில், " ஃபரூக் அப்துல்லா தனது உடல்நிலை காரணமாக இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அலி முகமது சாகர் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களிடம் அனுமதி பெற்றுள்ளார்.

    தற்போது அந்த தொகுதியில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவது கட்சியின் பொறுப்பாகும். டெல்லியில் மக்களின் குரலாக திகழும் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் வெற்றிபெற வாக்காளர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
    • கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2104-ம் ஆண்டு தாங்க அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படாதது குறித்து முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா காட்டமாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக எவ்வளவோ செய்கின்றனர். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் நிலுவையில் உள்ள சட்டமன்ற தேர்தலை, தேர்தல் ஆணையத்தால் நடத்த முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

    • உமர் அப்துல்லா டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
    • பிரிந்து சென்ற தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்குமாறு அவர் முறையிட்டார்.

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா. தேசிய மாநாட்டு கட்சி தலைவரான அவர் பிரிந்து சென்ற தனது மனைவி பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

    உமர் அப்துல்லாவின் இந்த மனுவை கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி விசாரணை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. திருமண முறிவை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி கோர்ட்டு அவரது விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து உமர் அப்துல்லா டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். பிரிந்து சென்ற தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்குமாறு அவர் முறையிட்டார்.

    டெல்லி ஐகோர்ட்டு இன்று உமர் அப்துல்லாவின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    மேல்முறையீட்டில் எந்த தகுதியும் இல்லை என்று கூறி நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை தள்ளுபடி செய் தது. கீழ் கோர்ட்டு வழங்கிய உத்தரவை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது.

    • உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கவலை அளிக்கிறது- குலாம் நபி ஆசாத்
    • இந்த தீர்ப்பு ஏமாற்றம்தான். ஆனால், மனம் தளரவில்லை- உமர் அப்துல்லா

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்புரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அடுத்தாண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறுகையில் "உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கவலை அளிக்கிறது. துரதிருஷ்டவசமானது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்த தீர்ப்பா் மகிழ்ச்சியடையவில்லை." என்றார்.

    உமர் அப்துல்லா கூறியதாவது:-

    இந்த நிலையை அடைய பா.ஜனதாவுக்கு தசாப்தங்கள் எடுத்துக் கொண்டுள்ளது. நாங்கள் நீண்ட காலத்திற்காக தயாராகியுள்ளோம். இந்த தீர்ப்பு ஏமாற்றம்தான். ஆனால், மனம் தளரவில்லை. தொடர்ந்து போராடுவோம்.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.

    • 370 பிரிவு நீக்கப்பட்டால், துப்பாக்கி சண்டையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றார்கள்.
    • துப்பாக்கிச்சண்டை நடைபெற்று ஒருவாரம் கூட முடியவில்லை.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா குல்காம் மாவட்டத்தில் நடந்த பேரணில் கலந்த கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. தேர்தல், வேலைவாய்ப்பின்மையை தீர்ப்போம், வளர்ச்சியடையச் செய்வோம் என்ற பேரில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசால் துரோகம் இழைக்கப்படுகிறது.

    இதுவரை மின்சாரம் தடைக்கு தீர்வு காணப்படாதது ஏன்?. இன்று, ஏராளமாக பணம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, 14 மணி நேர மின்சார தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?.

    காஷ்மீரில் பல்வேறு மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு 370-வது பிரிவுதான் காரணம். 370 பிரிவு நீக்கப்பட்டால், துப்பாக்கி சண்டையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றார்கள். ஆனால், இந்த பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று ஒருவாரம் கூட முடியவில்லை.

    5 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகள் என்று அரசு சொல்கிறது. இதில் நான்கு பேர் 2020-ல் ஆயுதத்தை கையில் எடுத்தவர்கள். 2021-ல் ஒருவர் கையில் எடுத்தார். இதெல்லாம் 2019-க்குப் பிறகுதான். அரசு தோல்வி அடைந்ததைத்தான் இது காட்டுகிறது. இது உங்களின் (மத்திய அரசு) ஏமாற்றத்தை காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்த மக்களையும் ஏமாற்றிவிட்டீர்கள்.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்த மத்திய அரசு, அரசாணை வெளியிடவில்லை
    • கட்டாயம் இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறாது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. தொகுதி வரையறை முடிவடைந்த பின்னர் தேர்தல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அதற்கான வேலைகள் நடந்த பாடில்லை.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உமர் அப்துல்லா கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தில், பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை. கார்கில் மாவட்டத்தை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான லடாக்- கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 22 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 26 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 12, காங்கிரஸ் 10, பா.ஜனதா, சுயேட்சை தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த வெற்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பிரதிபலிக்கும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நாங்கள் தற்போது ஐந்து ஆண்டுகளாக கவர்னர் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறோம். 2019-ம் ஆண்டிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது. ஏன் தேர்தலை தள்ளிப்போட வேண்டும்.

    சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் கட்டாயம் இல்லை என்றால், அதையும் நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை.

    மக்களின் உணர்வை அவர்கள் நன்றாக புரிந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை நடுத்துவது அவர்களது கட்டாயம். அது கட்டாயம் இல்லை என்றால், பாராளுமன்ற தேர்தலை நடத்தமாட்டார்கள். அவர்கள் மக்களை எதிர்கொள்ள வெட்கப்படுகிறார்கள். பாராளுமன்ற தேர்லுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து உள்ளிட்ட எந்த தேர்தலும் இருக்காது.

    LAHDC-Kargil தேர்தல் முடிவு அவர்களுடைய அச்சத்தை நிரூபித்து விட்டது. தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களில் 22 இடங்களை பிடித்தது. வெற்றி பெற்ற இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் கூட எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இவ்வாறு உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் சட்டசபை தேர்தல் நடைபெறவில்லை.
    • கர்நாடகாவில் பா.ஜனதா கட்சி, ஆட்சியை இழந்துள்ளது.

    ஸ்ரீநகர் :

    கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. அங்கு ஆளும் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்து உள்ளது.

    இந்த வெற்றிக்காக காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    கர்நாடகாவில் பா.ஜனதா கட்சி, ஆட்சியை இழந்துள்ளதால் காஷ்மீரில் இனி சட்டசபை தேர்தல் நடக்குமா? என அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா சந்தேகம் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'கர்நாடகா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், காஷ்மீரில் தற்போதைக்கு சட்டமன்றத் தேர்தலை நடத்த பா.ஜனதாவுக்கு தைரியம் வர வாய்ப்பில்லை' என குறிப்பிட்டு உள்ளார்.

    காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் சட்டசபை தேர்தல் நடைபெறவில்லை. அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜனதா அல்லாத கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் தைரியம் பாஜகவினருக்கு இல்லை.
    • கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் தனது சொந்த முடிவை எடுக்கவில்லை.

    ஸ்ரீநகர்:

    தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பாஜக விரும்பவில்லை. ஏனென்றால், தேர்தலில் தோற்றுவிடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை. தேர்தலுக்காக பிச்சை எடுக்க நாங்களும் தயாராக இல்லை. தேர்தலை நடத்தினால் நல்லது.

    பாஜக தேர்தலை விரும்பவில்லை என்பதால், தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் தனது சொந்த முடிவை எடுக்கவில்லை. எப்போது முடிவெடுத்தாலும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன்பிறகே முடிவெடுக்கிறது.

    • 2018-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
    • ஜம்மு காஷ்மீரில் எங்கு ஜனநாயகம் உள்ளது.

    மீனம்பாக்கம் :

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் 2014-ம் ஆண்டு தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இருந்தது. 2018-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.

    ஜம்மு காஷ்மீரில் எங்கு ஜனநாயகம் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் அமைதியாக உள்ளது என கூறும் பிரதமர் மோடி, அப்போது ஏன் இங்கு இதுவரை தேர்தல் நடத்தவில்லை. ஜனநாயக திருவிழா கொண்டாட வேண்டும் என்றால் எங்களுக்கு ஜனநாயகத்தை தர வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீரில் தற்போது கல்வீச்சு சம்பவங்கள் இல்லை. ஒரு சில பகுதிகளில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடக்கிறது. ஜம்மு நகரில் குண்டு வெடிப்பு நடந்தது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும். தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×