search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDIA Bloc"

    • மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன.
    • ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கார்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன. மக்களவை தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி உடைந்துவிடும். தோல்விக்கு பிறகு பலிகடாவை தேடுவார்கள்.

    அமேதியில் (ராகுல் காந்தி கடந்த வருடம் தோல்வியடைந்ததை மனதில் வைத்து கூறினார்) இருந்து காங்கிரஸ் சென்று விட்டது. ரேபரேலியில் (தற்போது ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுகிறார்) இருந்தும் செல்வார்கள். ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக பதோஹியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியால் டெபாசிட்டை பாதுகாப்பதே கடினம்தான். ஆகவே, அவர்கள் பதோஹியில் பரிசோதனை அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் என்பது இந்துக்கள் கொலை, தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான துன்புறுத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை. அங்கு பல பாஜக தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இந்துக்களை கங்கை நதியில் மூழ்கடித்து கொன்று விடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறுகிறார்.

    மேற்கு வங்காளத்தில் இந்த வகையிலான அரசியலைத்தான் திரிணாமுல் காங்கிரஸ் செய்கிறது. சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் திரிணாமுல் அரசியலை முயற்சிக்க விரும்பின. அது அரசியல் திருப்திபடுத்துதல், தலித்துகள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் அரசியலாகும்" என்றார்.

    • ஜூன் 4ம் தேதி சிறைக்குள் தேர்தல் முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
    • இந்தியா அணி வெற்றி பெற்றால், ஜூன் 5 ஆம் தேதி நான் மீண்டும் வெளியே வருவேன்.

    மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீன் பெற்று சில நாட்கள் ஆன நிலையில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களிடம் (ஏஏபி) அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துகளை தெரிவித்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி அவர் சரண் அடைய வேண்டும்.

    இந்நிலையில், "நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு ஜூன் 5-ஆம் தேதி திகார் சிறையில் இருந்து திரும்புவேன்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

    மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    திகாரில் உள்ள எனது அறைக்குள் இரண்டு சிசிடிவி கேமராக்கள் இருந்தன. அதனை 13 அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த சிசிடிவி காட்சிகள் பிரதமர் அலுவலகத்திற்கும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி என்னைக் கண்காணித்து வருகிறார். எனக்குத் தெரியவில்லை. மோடிக்கு என் மீது என்ன வெறுப்பு என்று..

    நான் குளியலறைக்குச் செல்வதற்காக இரவில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறேன் என்பதையும் அவர்கள் கண்காணிப்பார்கள்.

    பிரதமர் மோடி, கெஜ்ரிவால் உடைந்துவிட்டாரா இல்லையா என்பதைப் பார்க்க விரும்பினார். கெஜ்ரிவால் மனச்சோர்வடையவில்லை. எனக்கு ஹனுமானின் ஆசீர்வாதம் இருப்பதாக நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். கெஜ்ரிவால் இப்படி உடைப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர் செய்யமாட்டார். மோடி ஒன்றும் கடவுள் இல்லை.

    ஜூன் 2ம் தேதி திகார் சிறைக்கு திரும்பினாலும், ஜூன் 4ம் தேதி சிறைக்குள் தேர்தல் முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    நான் கடினமாக உழைத்தால், இந்தியா அணி வெற்றி பெற்றால், ஜூன் 5 ஆம் தேதி நான் மீண்டும் வெளியே வருவேன். ஆனால் இப்போது கடினமாக உழைக்காவிட்டால் மீண்டும் எப்போது சந்திக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது,
    • அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, ராகுல் காந்தி அங்கே சென்றார்.

    குஜராத் மாநிலம் தஹோத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கடவுள் ராமர் கற்பனையே. வரலாற்று ரீதியாக அல்லது அறிவியல்பூர்வமாக அவர் இருந்ததற்கான எந்த சான்றுகள் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.

    அவர்கள் தடைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி கடவுள் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தினார். 10 நாட்கள் சடங்குகளுக்குப் பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22-ந்தேதி நடைபெற்றது.

    நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, அடுத்த நாளே அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி அங்கே சென்றார்.

    அப்சல் குருவுக்கு ஆதரவான துண்டாக்க விரும்பும் கும்பலுக்கு ஆதரவு தெரிவித்தார். அவருடைய கட்சி அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு (கணையா குமார் வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்) மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் தேச விரோத சக்திகளுடன் இல்லையா? அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?

    அம்பேத்கர் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது, சமூக நீதிக்காக இடஒதுக்கீடு எனக் கூறியதை பிரதமர் மோடி மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

    எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இது நமது அரசியலமைப்ப சூறையாடுவதற்கு சமம். நாட்டை பலவீனப்படுத்தும் மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    • தற்போது முடிந்துள்ள இரு கட்டங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது.
    • ஜூன் 4 -ம் தேதி அன்று இந்தியா கூட்டணி 300 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பேரணியின்போது பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வருடத்திற்கு ஒரு பிரதமர் என 5 பிரதமர்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே, பிரதமரின் கருத்துக்கு சிவசேனாவின் சஞ்சய் ராவத் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அவர்கள் ஒரு வருடத்தில் 2 அல்லது 4 பிரதமர்களை கூட உருவாக்குவார்கள். ஆனால் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல விடமாட்டோம்.

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சி சிறந்தது. யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது எங்கள் விருப்பம்.

    தற்போது முடிந்துள்ள இரு கட்டங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது.

    வரும் ஜூன் 4 -ம் தேதி அன்று இந்தியா கூட்டணி 300 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    • இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது.
    • அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை.

    பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆன்லாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பை மாற்றுவதற்காக வாக்குகள் கோருகிறது. அவர்கள் பொருளாதார அடிப்படையில் மட்டும் கணக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை. அமைப்புகள் மற்றும் அலுவலங்கள் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்கள்.

    பிறப்படுத்தப்பட்டோர் அல்லது தலித் குடும்பத்தை சேர்ந்த இருவர் வேலை செய்தால், அவர்கள் அதில் ஒருவர் வேலையை பறித்து, நாட்டின் வளத்தின் முதல் உரிமையை பெற்றிருக்க வேண்டும் என யாரை குறிப்பிட்டார்களோ அவர்களுக்கு வழங்குவார்கள்" என்றார்.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டின் வளங்களில் முதல் உரிமை கோரலை பெற்றிருக்க வேண்டும் எனக் கூறியதை மேற்கோள் காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது.
    • இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. முழு நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றியுள்ளது என்று குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் சிஏஏ மற்றும் என்ஆர்சி ரத்து செய்யப்படும். அனைத்து பாரபட்சமான சட்டங்களையும் ரத்து செய்வோம்.

    பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலை பார்த்ததில்லை. தனது கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது. மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை விரும்பவில்லை.

    அசாம் மாநில 2026 சட்டசபை தேர்தலில் தனது கட்சி 126 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை. நான் மீண்டும் வருவேன் என்று கூறினார்.

    • மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு.
    • தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன.

    கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரும் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே, மோடி எல்லாம் செய்கிறார். சாலை, உள்கட்டமைப்பு, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதை மோடி கொடுத்துவிடுவார்.

    அதானி எப்படியெல்லாம் இந்த அரசில் சலுகைகளை பெறுகிறார் என நாடாளுமன்றத்தில் பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

    எனது அரசு இல்லமும் பறிக்கப்பட்டது. உண்மையிலேயே எனக்கு அந்த வீடு தேவையில்லை. இந்திய மக்களின் இதயத்தில் பல லட்சம் வீடுகள் உள்ளன. என் வீடு பறிக்கப்பட்டாலும் தமிழர்கள் எனக்காக தங்களது வீடுகளை திறந்து வைத்திருப்பார்கள். பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வெறும் அரசியல் தலைவர்கள் அல்ல. மக்களின் குரலாக இருந்ததால், அவர்கள் பேசியதை உலகமே கேட்டது.

    ஏன் தமிழ் மொழி மீது, தமிழ் வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? என மக்கள் மோடியை நோக்கி கேட்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவர் என பேசுகிறீர்கள். மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள். ஏன் 'ஒரே நாடு ஒரே மொழி' என ஒரு மொழிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். தமிழ், பெங்காலி, கன்னடா, மணிப்பூரி ஆகிய மொழிகளுக்கெல்லாம் ஏன் நீங்கள் பேசக் கூடாது?

    தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதாலேயே அது குறித்த விபரங்கள் வெளியாகின. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.

    ஊழல் செய்தவர்கள் பா.ஜனதா வைத்துள்ள வாஷிங் மெஷினுக்குள் சென்றால் சுத்தமாகிவிடுகிறார்கள். எனது மூத்த அண்ணன் ஸ்டாலின். அவரைத் தவிர வேறு யாரையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை.

    வேலையில்லா திண்டாட்டம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 83 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். பாஜக தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி பணம் பெற்றுள்ளது. உலகிலேயே மாபெரும் ஊழல் மோடி செய்ததுதான்.

    விசாரணை அமைப்புகளை வைத்து ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அரசியல் சாசன ஆன்மா மீது மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது. இந்தியா என்பது மக்களுக்கானது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சொந்தமானது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடி இவ்வாறு செய்திருந்தால் அவர்களின் நோக்கம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
    • முகலாயர்கள் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் மன்னர்களை தோற்கடித்ததுடன் திருப்தி அடையவில்லை.

    ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதுவும் நவராத்திரி காலத்தின்போது இவ்வாறு செய்ததாக பா.ஜனதாவினர் கடுமையாக விமர்சித்தனர்.

    இந்துக்களால் மங்களகரமானதாகக் கருதப்படும் காலங்களில் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் "பா.ஜனதா மற்றும் கோடி மீடியாவை பின்தொடர்பவர்களுக்கான செயல்திறன் பரிசோதனை. இந்த வீடியோ நவராத்திரி தொடங்குவதற்கு முந்தையநாள் எடுக்கப்பட்டது" என விளக்கம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது இந்துக்களால் மங்களகரமானதாகக் கருதப்படும் காலங்களில் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியிட்டு மக்களை கேலி செய்ய விரும்புகின்றனர் என ராகுல் காந்தி, லாலு யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி, லாலு யாதவ் ஆட்டிறைச்சி சமைத்தது தொடர்பான வீடியோவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு நாட்டில் அதிகப்படியாக உள்ள மக்களின் உணர்வுகள் குறித்து கவலை இல்லை. சவான் மாத்தின்போது (இந்திய காலண்டரில் மக்களகரமான மாதம்), அவர்கள் குற்றவாளியின் வீட்டிற்குச் சென்று ஆட்டிறைச்சி சமைக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் வீடியோவை அப்லோடு செய்து நாட்டு மக்களை கேலி செய்கிறார்கள்.

    எதைச் சாப்பிடக் கூடாது என சட்டம் தடைபோடுவதில்லை. மாறாக மோடி இவ்வாறு செய்திருந்தால் அவர்களின் நோக்கம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். முகலாயர்கள் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் மன்னர்களை தோற்கடித்ததுடன் திருப்தி அடையவில்லை. கோவில்களை அழித்ததோடு அவர்கள் திருப்தி அடையவில்லை. அவர்கள் அதை அனுபவித்தார்கள். அதேவழியில் சவான் மாதத்தில் வீடியோக்ளை அப்லோடு செய்து அவர்கள் முகலாயர்கள் காலத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்தி மக்களை கேலி செய்து அவர்களின் வாக்கு வங்கிகளை உயர்த்த முயற்சிக்கிறார்கள்.

    அதேவழியில் நவராத்தியின்போது (தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடும் வீடியோவை குறித்து) மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி யாரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? இப்படிச் சொன்னதற்காக இவர்கள் இப்போது என் மீது துஷ்பிரயோகங்களைப் பொழிவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் எல்லையை தாண்டும்போது எது சரி என்று மக்களுக்குச் சொல்வது ஜனநாயகத்தில் எனது கடமை. நான் எனது கடமையைச் செய்கிறேன்.

    அவர்கள் வேண்டுமென்றே நாட்டின் நம்பிக்கைகளைத் தாக்குவதற்காக இதைச் செய்கிறார்கள், இதனால் நாட்டின் பெரும்பகுதியினர் அவர்களின் வீடியோக்களைப் பார்த்து அசௌகரியம் அடைகின்றனர். அவர்கள் சமரச அரசியலை தாண்டி முகலாய சிந்தனைக்கு ஆதாரமாக உள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • பசுபதி பராஸ் கட்சியுடன் சேர்த்து மொத்தமாக 6 தொகுதிகள்தான் தருவோம் என்கிறது பா.ஜனதா.
    • சிராக் பஸ்வானுக்கு 8 தொகுதிகளுடன், உ.பி.யில் 2 தொகுதிகள் கொடுக்க முன்வரும் இந்தியா கூட்டணி.

    பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணில் நிதிஷ் குமார் கட்சி, மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம் பிடித்திருந்தன. 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியிருந்தது.

    இந்த முறையும் இதே கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த பிறகு, அந்த கட்சியில் இருந்து பிரிந்து பசுபதி பராஸ் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

    2019-ல் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஆறு இடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வாக் அதே ஆறு தொகுதிகளை கேட்கிறார். அதேவேளையில் பசுபதி பராஸ் கட்சியுடன் சேர்த்து மொத்தமாக ஆறு தொகுதிகள் தருகிறோம். லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சிக்கு தனியாக ஆறு இடங்கள் தர முடியாது என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    இதனால் கூட்டணி அமைவதில் இழுபறி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை இணைந்து, கடந்த முறை லோக் ஜன சக்தி போட்டியிட்ட அதே ஆறு இடங்களை தருகிறோம். மேலும் கூடுதலாக இரண்டு தொகுதிகள் வழங்குகிறோம். அத்துடன் உத்தர பிரதேசத்தில் இரண்டு இடங்கள் தருகிறோம் எனத் தெரிவித்து, சிராக் பஸ்வானை இந்தியா கூட்டணிக்கு இழுக்க காய் நகர்த்தி வருகிறது.

    பசுபதி பராஸ்க்கு பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. அரசில் மந்திரி பதவி கொடுக்கப்பட்டதும், சிராஜ் பஸ்வான் ஐக்கிய ஜனதா தளம் மற்றம் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார். எனினும், பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து பேசவில்லை. அவர் ஏற்கனவே பிரதமர் மோடியை ராமர் என்றும், தன்னை ஹனுமான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    2020-ல் பா.ஜனதா உடன் நிதிஷ் குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சிராக் பஸ்வான் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தார்.

    மேலும் சிராக் பஸ்வான்- பசுபதி பராஸ் இடையே ஹஜிபுர் தொகுதியை பெறுவதில் போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

    ஆக மொத்தத்தில் பா.ஜனதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிராக் பஸ்வான் இந்தியா கூட்டணி வந்தால் அது சாதகமாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

    • வாரணாசி ஒரு மினி பஞ்சாப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.
    • இந்தியா இன்று சாந்த் ரவிதாஸின் தகவல்களை ஏற்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியை தாக்கி, அதன் உறுப்பினர்கள் சாதிவெறியின் பெயரால் மக்களைச் சுரண்டுவதாக குற்றம் சாட்டினார்.

    அவர் தனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் சாந்த் ரவிதாஸின் 647-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். முன்னதாக, இங்கு புதிதாக நிறுவப்பட்ட சாந்த் ரவிதாஸ் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார். 

    அப்போது பிரதமர் மோடி பேசுகையில்," சாந்த் ரவிதாஸின் பிறந்தநாளின் புனிதமான நிகழ்வில், உங்கள் அனைவரையும் அவரது பிறந்த இடத்திற்கு வரவேற்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் தொலைதூர இடங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள். குறிப்பாக பஞ்சாபில் இருந்து வந்திருக்கும் என் சகோதர சகோதரிகள். வாரணாசி ஒரு மினி பஞ்சாப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.

    இந்தியா இன்று சாந்த் ரவிதாஸின் தகவல்களை ஏற்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. அவரது ஆசீர்வாதத்தால் இவை அனைத்தும் சாத்தியமானது.

    தங்களின் குடும்பத்தினரின் நலன் மீது மட்டுமே அக்கறை கொண்டவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலன் பற்றி சிந்திக்க முடியாது. பழங்குடியின பெண் ஒருவரை இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்" என்றார்.

    • மும்பை தொகுதிகளை பிரிப்பதில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரே கட்சி இடையே இழுபறி.
    • நான்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிட தீர்மானித்துள்ளது.

    இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் துரிதப்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி, அகிலேஷ் யாதவ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

    தற்போது மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைவதற்கான வேலைகளை காங்கிரஸ் செய்து வருகிறது. 2019 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), காங்கிரஸ் ஆகியவை மகா கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இது பொருந்தாத கூட்டணி என விமர்சனம் செய்யப்பட்டது.

    பின்னர் ஏக் நாத் ஷிண்டே, தனது அணிதான் சிவசேனா கட்சி என அறிவித்து பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இதனால் மகா கூட்டணி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து போனது.

    தற்போது மகா கூட்டணி மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. 48 தொகுதிகளை மூன்று கட்சிகளும் பகிர்ந்து கொண்டு போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    உத்தவ் தாக்கரே 18 தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். மேலும் மும்பையில் உள்ள தெற்கு மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, தென்மேற்கு மும்பை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.

    அதேவேளையில் காங்கிரஸ் மும்பையில் தென்மத்திய மும்பை, வடக்கு மத்திய மும்பை, வடமேற்கு மும்பை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.

    மும்பையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. இதனால் ராகுல் காந்தி நேற்று உத்தவ் தாக்கரேயிடம் சுமார் ஒரு மணி நேரம் போனில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அப்போது மும்பை தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மூன்று கட்சிகளுக்கு இடையில் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறும் எனத் தெரிகிறது.

    2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரே கட்சி 22 இடங்களில் போட்டியிட்டது. அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் மும்பையைச் சேர்ந்த மூன்று தொகுதிகளும் அடங்கும்.

    40 தொகுதிகள் குறித்து முடிவு செய்து விட்டதாகவும், 8 தொகுதிகள்தான் இழுபறியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பா.ஜனதாவுக்கு கைக்கெடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இந்த மகா கூட்டணி 48 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றால் அது பா.ஜனதாவுக்கு பின்னடைவாக கருதப்படும்.

    2019 தேர்தல் பா.ஜனதா- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கூட்டணி 41 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. பாஜனதா 23 இடங்களை கைப்பற்றியிருந்தது.

    • டெல்லியில் ஒரு இடம்தான் காங்கிரஸ்க்கு வழங்க முடியும் என்றது ஆம் ஆத்மி.
    • தற்போது 4-3 என்ற அளவில் இடங்களை பிரித்துக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்.

    மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் பல கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளில் உள்ளன. இதில் 15 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ்க்கு கொடுக்க முடியும். இதை ஏற்றுக் கொண்டால் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்வேன் என அகிலேஷ் யாதவ் நிபந்தனை விதித்தார்.

    இறுதியாக 17 இடங்களை காங்கிரஸ்க்கு ஒதுக்க முன்வந்தார். இது தொடர்பாக காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சி இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தற்போது ஆம் ஆத்மி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளன. ஆனால், பா.ஜனதாவை வீழ்த்தி டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்தன.

    ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நிலவிவந்தது. காங்கிரஸ்க்கு ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் ஆம் ஆத்மி பிடிவாதமாக இருந்தது.

    சண்டிகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் தலையிட்டதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி உதவியுடன் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் டெல்லி குறித்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    இரு கட்சிகளும் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு இந்தியா கூட்டணிக்கான வெற்றி என அறிவித்துள்ளன. இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அது சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று மாலைக்குள் இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் எனத் தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியானால், இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தடையை தாண்டியதாக கருதப்படும்.

    ×