search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hardik pandya"

    • மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது.
    • அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி மும்பை அணி தனது கடைசி 'லீக்' ஆட்டத்தி்ல் லக்னோவிடம் தோற்று கடைசி இடத்தை பிடித்தது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது.

    நிக்கோலஸ் பூரண் 29 பந்தில் 75 ரன்னும் (5 பவுண் டரி), 8 சிக்சர்), கேப்டன் கே.எல்.ராகுல் 41 பந்தில் 55 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். நுவன் துஷாரா, பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 196 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 18 ரன் வித்தியாசத் தில் தோற்றது.

    ரோகித் சர்மா 38 பந்தில் 68 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), நமன்திர் 28 பந்தில் 62 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக் தலா 2 விக்கெட்டும், குணால் பாண்ட்யா, மோஷித் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.

    5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 10-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தை பிடித்தது.

    லக்னோ 7-வது வெற்றியை பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது. லக்னோவும், டெல்லியும் தலா 14 புள்ளிகளை பெற்று இருந்தாலும் ரன் ரேட்டில் மிக மோசமாக இருந்ததால் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியாமல் போனது.

    இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த அணி பந்து வீசவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டி தொடரில் இதே மாதிரி தடை விதிக்கப்பட்ட 2- வது வீரர் ஆவார். ஏற்கனவே ரிஷப் பண்டுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது டெல்லி அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பாதித்தது.

    ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த சீசன் முடிந்துவிட்டது. மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லில் அவரது முதல் ஆட்டத்தில் விளை யாட முடியாது.

    மேலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அணியில் ஆடிய மற்ற வீரர்களுக்கும் தலா ரூ.12 லட்சம் அல்லது 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    • ரோகித் சர்மா ஒரு சதமடித்தார் மும்பை தோற்றது.
    • இஷான் கிஷன் மொத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியும் பவர் பிளே ஓவர்களை தாண்டவில்லை.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வரை கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த சீசனில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்விக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்ட்யா முக்கிய காரணம் என கருத்துக்கள்  வந்த வண்ணம் உள்ளது. 

    இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி களற்றிவிட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோர் ஒரு படத்தில் நடித்திருந்தால் அது வெற்றி பெறுமா என்பதை என்னிடம் சொல்லுங்கள்? கண்டிப்பாக கிடையாது. நீங்கள் அதற்கு நன்றாக செயல்பட வேண்டும். உங்களுக்கு நல்ல கதை வேண்டும். அதேபோல நட்சத்திர வீரர்கள் ஒன்றாக சேர்ந்தால் மட்டும் போதாது. நன்றாக செயல்பட வேண்டும்.

     ரோகித் சர்மா ஒரு சதமடித்தார். ஆனால் அந்த போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. மற்ற போட்டிகளில் அவருடைய செயல்பாடுகள் எங்கே? இஷான் கிஷன் மொத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியும் பவர் பிளே ஓவர்களை தாண்டவில்லை. தற்போதைய நிலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே முக்கியமானவர்களாக இருக்கின்றனர். எனவே அவர்களை தவிர்த்து அடுத்த வருடம் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் மற்ற அனைத்து வீரர்களையும் மும்பை கழற்றி விட வேண்டும்.

    இவ்வாறு சேவாக் கூறினார்.

    • லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது.
    • இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் பெருத்த தடுமாற்றத்தை சந்தித்ததுடன் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை முதல் அணியாக பறிகொடுத்தது.

    அந்த அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் மாற்றத்தால் வீரர்கள் இடையே ஏற்பட்ட புகைச்சல் அந்த அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா (3 அரைசதம் உள்பட 416 ரன்), ரோகித் சர்மா (ஒருசதம் உள்பட 349 ரன்), சூர்யகுமார் யாதவ் (1 சதம், 3 அரைசதம் உள்பட 345 ரன்), இஷான் கிஷன் (306 ரன்), டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பியுஷ் சாவ்லா, நுவன் துஷாரா ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் (-0.787) மிகவும் பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது. லக்னோ தனது கடைசி 3 ஆட்டங்களில் கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது பெருத்த சரிவாக அமைந்தது.

    வெற்றியுடன் விடைபெறுவது யார்?

    லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதத்துடன் 465 ரன்), நிகோலஸ் பூரன் (2 அரைசதத்துடன் 424 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (1 சதம், 2 அரைசதத்துடன் 360 ரன்), குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் நவீன் உல்-ஹக், யாஷ் தாக்குர், மொசின் கான், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடும் இரு அணிகளும் வெற்றியுடன் விடைபெறுவதுடன், புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்),நேஹல் வதேரா, டிம் டேவிட், பியுஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஜீ, ஜஸ்பிரித் பும்ரா, நுவன் துஷாரா.

    லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், குருணல் பாண்ட்யா, ஆயுஷ் பதோனி, அர்ஷத் கான் அல்லது மொசின் கான், யுத்விர் சிங், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.
    • ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய சென்னை அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சிவம் துபே 13 பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் 100 சிக்சர் விளாசிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சாதனையை துபே முறியடித்துள்ளார்.

    ஹர்திக் பாண்ட்யா 1046 பந்துகளில் 100 சிக்சர் விளாசியுள்ளார். துபே 992 பந்துகளில் 100 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார். ஒட்டு மொத்தமாக ரஸல் மற்றும் கெய்ல் ஆகியோருக்கு அடுத்தப்படியாக துபே உள்ளார்.

    குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் விவரம்:-

    சிவம் துபே -992

    ஹர்திக் பாண்ட்யா - 1046

    ரிஷப் பண்ட் - 1224

    யூசப் பதான் -1313

    யுவராஜ் சிங் - 1332

    ஒட்டுமொத்தமாக குறைந்த பந்தில் 100 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் விவரம்:-

    ரஸல் - 657 பந்துகள்

    கெய்ல் - 943 பந்துகள்

    சிவம் துபே - 992 பந்துகள்

    ஹர்திக் பாண்ட்யா - 1046 பந்துகள்

    பொல்லார்ட் - 1094

    • அனைத்து வீரர்களும் இனி பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும்.
    • ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக கடந்த காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான தேர்வு விரைவில் தொடங்கும் என்று ஜெயிஷா அறிவித்துள்ள நிலையில் புதிய கேப்டன் யார் என்ற கேள்வியும் கூடவே எழுந்திருக்கிறது. தற்போது ரோகித் சர்மாவுக்கு 38 வயது ஆகிவிட்டதால் அவர் நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாது.

    இன்னும் சொல்லப்போனால் 2024-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தான் அவருக்கு கேப்டனாக கடைசி தொடராக இருக்கலாம். இதனால் அடுத்த கேப்டன் யார் என்ற பந்தயத்தில் ஹர்திக் பாண்ட்யா கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இருக்கிறார்கள்.

    ஹர்திக் பாண்ட்யா, குஜராத் அணிக்காக கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட நிலையில் அதன் பிறகு அவருடைய கேப்டன்ஷிப் மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. எனினும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தான் துணை கேப்டன் பதவி கிடைத்திருக்கிறது.

    இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அனைத்து வீரர்களும் இனி பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும். ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக கடந்த காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் தற்போது வெள்ளை நிற கிரிக்கெட் பந்து தொடர்களில் ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் அடுத்த கேப்டன் பதவி வேண்டும் என்றால் உடல் தகுதியை நிரூபிப்பதோடு இனி உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட வேண்டும்.

    என்று ஜெய்ஷா கூறினார்.

    • மும்பை அணியின் தோல்விக்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
    • இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வரும் பிரச்சனை தான் என்று அணி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    நடப்பு ஐ.பி.எல். தொடர் மும்பை அணிக்கு ஒரு மோசமான சீசனாக அமைந்துள்ளது. மும்பை அணி விளையாடிய 12 போட்டிகளில் 8 தோல்வி, 4 வெற்றி உட்பட 8 புள்ளிகளுடன் இத்தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணி இதுவாகும்.

    10 ஆண்டுகளுக்கு பின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் களமிறங்கிய மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் ஏராளமானோர் இருந்த போதும், அணியின் தோல்விக்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

    இந்நிலையில் மும்பை அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் தோல்வி குறித்து தங்களது கருத்தை பயிற்சியாளரிடமும், அணியின் நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    தோல்வியின் போது ஒரு வீரரின் மேல் பழியை போடுவதும் மும்பை வீரர்களால் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற எனர்ஜி இல்லை. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி ஸ்டைலே காரணம் என்று கூறியுள்ளனர்.

    இதற்கு மும்பை அணி நிர்வாகிகள், அணி 10 ஆண்டுகளாக ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வந்துள்ளது. அதனால் வழக்கமாக தலைமை மாற்றத்தின் போது வரும் சவால் தான் மும்பை அணிக்கும் வந்துள்ளது. இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வரும் பிரச்சனை தான் என்று கூறியுள்ளனர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள்
    • மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை

    நேற்று மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 170 இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்அவுட் ஆகி 24 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை மும்பை அணி இழந்துள்ளது.

    இந்நிலையில் மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியுள்ளார். அதில், "மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள். எதிர்கொள்வதற்கு நிறைய பந்துகள் இருந்தும் அவர்கள் அவுட்டானார்கள்.

    மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. பாண்டியா, டேவிட் 7, 8வது இடத்தில் பேட்டிங் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே களமிறங்கினால் விரைவில் ஆட்டமிழக்கும் அளவுக்கு மோசமான வீரர்களா?

    குஜராத் கேப்டனாக ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். ஆனால் மும்பை அணியில் என்ன நடந்தது? அதில் நான் குழப்பமடைந்துள்ளேன். மும்பை அணி நிர்வாகம் இந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு என்ன நடந்தது என்று கேள்வியெழுப்ப வேண்டும். அல்லது தங்களுடைய பேட்டிங் வரிசை ஏன் மாறியது என்பதை வீரர்கள் விளக்க வேண்டும். இங்கே கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் மீதும் தவறு இருக்கிறது. எனவே உரிமையாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 முதல் 29 வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது.
    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. 9-ம் தேதி பாகிஸ்தானுடனும், 12-ம் தேதி அமெரிக்காவுடனும், 15-ம் தேதி கனடாவுடனும் மோதுகிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. நியூசிலாந்து மட்டுமே இதுவரை டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது.

    உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே, அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள். இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனை தேர்வு செய்யும் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பர் என தகவல் வெளியாகியுள்ளது.

    • சேவாக், ராயுடு தேர்வு செய்த அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
    • கீப்பராக ரிஷப் பண்டை சேவாக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ராயுடுவும் தேர்வு செய்துள்ளனர்,

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.

    இதே போல ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார்.

    மேலும் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என அஜித் அகர்கரிடம் சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேவாக் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சந்தீப் சர்மா, முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா.

    அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரியான் பராக், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், சிவம் துபே, மயங்க் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, சாஹல், ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ். 

    • நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின.
    • இதில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் சதமடிக்க 18.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி நடப்பு தொடரில் 5-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், கோட்சி முதலில் பந்து வீசுகையில் ஜெய்ஸ்வால் நிறைய ரன்களை அடித்து விடுகிறார். இதனால் 2வது ஓவரை வீச கோட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இது பாண்ட்யாவின் மோசமான கேப்டன்சிக்கு  உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

    • மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சண்டிகர்:

    17-வது ஐ.பி.எல். சீசனின் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் எடுத்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை 18 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது. அதனால் களத்திலேயே நடுவர்கள் உள்வட்டத்திற்கு வெளியே கடைசி 2 ஓவரில் ஒரு பீல்டரை குறைத்து மும்பைக்கு தண்டனை கொடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர்.
    • இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மும்பை:

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் சந்தித்து டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பாண்ட்யா இடம்பெற நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிகளவில் பந்து வீச வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இந்த கருத்து ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-

    நாங்கள் இதுவரை சந்திக்கவே இல்லை. நானோ அல்லது ராகுல் அல்லது அஜித்தோ அல்லது பிசிசிஐயின் யாரோ ஒருவர் கேமரா முன் வந்து பேசுவதை நீங்கள் கேட்காத வரையில், எதையும் நம்பவேண்டாம். அதேபோல உலகக்கோப்பையில் நானும் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்குவது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை என ரோகித் சர்மா கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா 6 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் அவர் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே பாண்ட்யா 4 ஓவர்களை வீசியுள்ளார்.

    டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு ஓவரை மட்டுமே வீசினார். சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான போட்டியில், பாண்ட்யா 3 ஓவர்கள் வீசினார். ஆனால் எதிலும் சிறந்த செயல்பாடு இல்லை. 

    ×