என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் கணக்கை பதம்பார்த்த ஹேக்கர்கள்
Byமாலை மலர்13 Dec 2021 6:11 AM GMT (Updated: 13 Dec 2021 6:11 AM GMT)
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பிட்காயின் பற்றிய பதிவு வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமரின் அக்கவுண்டில் 'இந்தியாவில் பிட்காயின் சட்டப்பூர்வ பரிவர்த்தனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது,' எனும் டுவிட் இடம்பெற்று இருந்தது.
டுவிட் வெளியான சில நிமிடங்களில் அக்கவுண்ட் மீட்கப்பட்டது என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 'பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் அக்கவுண்ட் சிறிது நேரத்திற்கு ஹேக் செய்யப்பட்டது. இதுபற்றி டுவிட்டருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அக்கவுண்ட் உடனடியாக மீட்கப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் பதிவான டுவிட்களை தவிர்க்கவும்,' என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
முன்னதாக செப்டம்பர் 2020 வாக்கில் பிரதமரின் தனிப்பட்ட வலைதளம் ஹேக் செய்யப்பட்டு, அப்போதும் பிட்காயின்களை விளம்பரப்படுத்தும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X