என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
பயனர் விவரங்களை குறிவைக்கும் வாட்ஸ்அப் பின்க்
Byமாலை மலர்19 April 2021 10:09 AM GMT (Updated: 19 April 2021 10:09 AM GMT)
பின்க் நிறத்தில் வாட்ஸ்அப் செயலி அறிமுகம் செய்யப்பட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வாட்ஸ்அப் செயலியை பின்க் நிறத்தில் பயன்படுத்தலாம் என கூறும் தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலுடன் வாட்ஸ்அப் பின்க் செயலியை டவுன்லோட் செய்யக் கூறி அதற்கான இணைய முகவரியும் வழங்கப்படுகிறது. இதனை க்ளிக் செய்ததும், ஸ்மார்ட்போனின் தீங்கு விளைவிக்கும் செயலி இன்ஸ்டால் ஆகிவிடும்.
பின் செயலியை இன்ஸ்டால் செய்தவரின் விவரங்களை ஹேக்கர்கள் இயக்க முடியும். இந்த செயலிக்கும் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. இதுபற்றிய விவரங்களை சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர் ராஜசேகர் ராஜாரியா வெளியிட்டு இருக்கிறார்.
இத்துடன் செயலி வாட்ஸ்அப் இன்டர்பேஸ் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். போலி செயலி மூலம் முடிந்தவரை பயனர்களின் விவரங்களை சேகரிக்க ஹேக்கர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X