என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
மீட்டிங்களில் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வசதி மைக்ரோசாப்ட் டீம்சில் அறிமுகம்
Byமாலை மலர்7 Aug 2020 6:57 AM GMT (Updated: 7 Aug 2020 6:57 AM GMT)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் சேவையில் ஒரே சமயத்தில் 20 ஆயிரம் பேருடன் பேசும் வசதி வழங்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது டீம்ஸ் சேவையில் அடிக்கடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் 20 ஆயிரம் பேர் ஒரே மீட்டிங்கில் கலந்து கொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்து உள்ளது. இந்த வசதி ஒருபுறம் நடைபெறும் மீட்டிங்களில் வேளை செய்யும்.
இதனால் ஒரே சமயத்தில் ஒருவர் உரையாற்றுவதை மற்றவர்கள் பார்க்கவும், கேட்கவும் முடியும். ஆனால் மீட்டிங்கில் கலந்து கொள்வோர் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. முதற்கட்டமாக இந்த சேவை ஜூலை மாத மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் 365 அப்டேட்களில் அறிவிக்கப்பட்டது.
இந்த அம்சம் தற்சமயம் பயனர்களுக்கு உலகம் முழுக்க வழங்கப்படுகிறது. மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவை ஸ்லாக் சேவைக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இருவழி மீட்டிங்கில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிது.
உலகில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் நிலையில், மைக்ரோசாப்ட் தனுத டீம்ஸ் சேவையில் தொடர்ந்து புதிய அப்டேட்கள் வழங்கப்படு வருகிறது. இவை வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு உதவும் வகையில் இருக்கும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X