search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங்
    X
    சாம்சங்

    அந்த துறையில் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளிய சாம்சங்

    உலக சந்தையில் சாம்சங் நிறுவனம் அந்த துறையில் ஆப்பளை பின்னுக்கு தள்ளியிருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிடைத்த வரவேற்பு காரணமாக சாம்சங் நிறுவனம் 2019 ஆண்டிற்கான உலகின் மூன்றாவது ஸ்மார்ட்போன் பிராசஸர் விநியோகம் செய்யும் நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது.  சாம்சங் நிறுவனம் ஆப்பிளை நான்காவது இடத்திற்கு தள்ளி மூன்றாவது இடம்பிடித்துள்ளது.

    2019 ஆண்டு நிலவரப்படி ஸ்மார்ட்போன் பிராசஸர் விநியோகம் செய்யும் முதல் ஐந்து நிறுவனங்களில் சாம்சங் மற்றும் ஹைசிலிகான் மட்டுமே கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கின்றன. சமீபத்திய தகவல்கள் கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிரின் 990 5ஜி

    விலை மற்றும் செயல்திறன் என இரண்டு விஷயங்களிலும் அதிக கவனமாக இருந்தது சாம்சங்கிற்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. எனினும், கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களுக்கான பிராசஸர்களை குவால்காம் மற்றும் மீடியாடெக் உள்ளிட்டவற்றிடம் இருந்து வாங்கியது சற்றே பின்னடைவாக அமைந்துள்ளது என கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவன மூத்த ஆய்வாளர் ஜேன் பார்க் தெரிவித்து இருக்கிறார். 

    முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.6 சதவீதம் சரிவடைந்து இருந்தாலும், குவால்காம் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. குவால்காமை தொடர்ந்து மீடியாடெக் நிறுவனம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
    Next Story
    ×