என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
கொரோனா வைரஸ் விவரங்களை வழங்க வாட்ஸ்அப் அக்கவுண்ட் துவங்கிய மத்திய அரசு
Byமாலை மலர்21 March 2020 4:51 AM GMT (Updated: 21 March 2020 4:51 AM GMT)
இந்திய குடிமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விவரங்களை வழங்க மத்திய அரசு வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஒன்றை துவங்கி இருக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்கும் நோக்கில் மத்திய அரசு வாட்ஸ்அப் செயலியில் அக்கவுண்ட் ஒன்றை துவங்கியிருக்கிறது. சாட்பாட் மூலம் இயங்கும் இந்த அக்கவுண்ட்டிற்கு MyGov Corona Helpdesk என பெயரிடப்பட்டுள்ளது.
அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் இந்த சேவையை பயன்படுத்த பொதுமக்கள் - 9013151515 என்ற எண்ணை தங்களது மொபைலில் சேமித்துக் கொண்டு MyGov Corona Helpdesk-க்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
புதிய சாட்பாட் சேவையானது கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி மக்களிடையே பரவும் போலி தகவல்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்கும்.
இந்தியாவில் இதுவரை சுமார் 251 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X