search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேப்பூர் சந்தை"

    • விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம்.
    • வியாபாரிகள் ஆடுகளை வாங்கி தாங்கள் கொண்டு வந்த லாரி, வேன் போன்றவைகளில் ஏற்றி சென்றனர்.

    வேப்பூா்:

    கடலூர் மாவட்டம் பெரியநெசலூர், குளவாய், காட்டு மயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்ய வெள்ளிக்கிழமை தோறும் வேப்பூரில் நடைபெறும் ஆட்டு சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாட இருக்கும் நிலையில் வேப்பூரில் இன்று ஆட்டு சந்தை நடைபெற்றது. இங்கு ஆடுகளை திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு ,கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது.

    ஒரு ஆடு 4 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று வழக்கத்தை விட விலை 500 முதல் ஆயிரம் வரை ஒரு ஆட்டின் விலை கூடுதலாக விற்கப்பட்டது.

    தீபாவளி பண்டிகை என்பதால் அதிகாலை 1 மணி முதல் 7 மணிக்குள் 6 மணி நேரத்துக்குள் சந்தை வளாகத்தில் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது.

    ரூ. 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்து உள்ளதாக தெரிவித்தனர். அதிக விலைக்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் ஆட்டு சந்தை மற்றும் கருவாட்டு சந்தை பிரபலமானது. செஞ்சி கருவாட்டு சந்தையில் வியாபாரம் செய்த வியாபாரி ஒருவர் விழுப்புரத்தில் பிரபல கல்வியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஆட்டு சந்தையும் பிரபலமாக உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள். இன்று நடந்த ஆட்டு சந்தையில் ஆடுகள் அமோகமாக விற்பனையானது.

    அதிகாலையிலேயே கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதேபோல் வியாபாரிகளும் புதுவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, செங்கல்பட்டு, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலையிலேயே ஆடுகளை கொள்முதல் செய்ய வந்திருந்தனர். ஆடுகள் வரவும் அதிகமாக இருந்தது.

    வியாபாரிகளும் அதிகமாக இருந்ததால் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. வியாபாரிகள் ஆடுகளை வாங்கி தாங்கள் கொண்டு வந்த லாரி, வேன் போன்றவைகளில் ஏற்றி சென்றனர்.

    இந்த வார சந்தையில் ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து அதிகப்பட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இந்த சந்தையில் சுமார் ரூ.6 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது.
    • ஒரு ஆட்டின் விலை 7 ஆயிரம் முதல் 35 ரூபாய் வரை விற்பனையானது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த ஆட்டு சந்தையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரிய நெசலூர், கொளவாய், காட்டு மயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, வரம்பனூர், கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகள் விற்பனை செய்ய சந்தைக்கு எடுத்து வருவர்.

    இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் காணும் பொங்கலன்று கறி சமைத்து உண்ணும் பழக்கம் நமது கிராமங்களில் உள்ளது. அதன் காரணமாக இறைச்சிக்காகவும், வளர்ப்பதற்காகவும் ஆடுகளை வாங்க புதுச்சேரி, திருச்சி, சென்னை தேனி, நாகை, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வேப்பூர் சந்தையில் குவிந்தனர்.

    அதன்படி கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவப்பாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது. ஒரு ஆட்டின் விலை 7 ஆயிரம் முதல் 35 ரூபாய் வரை விற்பனையானது. வழக்கத்தை விட 3 ஆயிரம் ரூபாய் வரையில் ஆட்டின் விலை இந்த வாரம் உயர்ந்திருந்தது. பொங்கல் பண்டிகை என்பதால் இன்று காலை 5 மணி முதல் 9 வரை ஆட்டு சந்தையில் காலை 8 மணி நிலவரப்படி 4 மணி நேரத்துக்குள் 3500 ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு 3 கோடியாகும்.

    1500 க்கும் மேற்பட்ட ஆடு வளர்ப்போரிடம் இருந்து 200க்கும் மேற்பட்டோர் வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையிலும் ஆடுகளை வாங்கிச் சென்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானதால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×