search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றிலை விலை உயர்வு"

    • மோகனூர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
    • தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் பரமத்தி வேலூர்- கரூர் செல்லும் சாலையில் உள்ள தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, அண்ணாநகர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.

    ஏல மார்க்கெட்டு

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் , பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்தி வேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் பரமத்தி வேலூர்- கரூர் செல்லும் சாலையில் உள்ள தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4000-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.4500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2500-க்கும் வாங்கிச் சென்றனர்.

    நேற்று வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.6ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 3,500-க்கும் வாங்கிச் சென்றனர்.

    வெற்றிலை வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்ந்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • தொடர்ந்து பண்டிகைகள் நடைபெற்று வருவதால் வெற்றிலை விலை உயர்ந்து வருகிறது.
    • நேற்றைய மார்கெட்டில் 2 ஆயிரம் விலை உயர்ந்து 16 ஆயிரமாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் கிராமங்களில் தொடர்ந்து பண்டிகைகள் நடைபெற்று வருவதால் வெற்றிலை விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த வாரம் நடந்த விற்பனையில் 12-கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ. 5ஆயிரம் முதல் அதிகபட்சமாக 14 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையானது.

    இந்நிலையில் நேற்று நடந்த ஞாயிறு சந்தைக்கு வெற்றிலை வரத்து அதிகமாகவும் இருந்தது. இருப்பினும் சித்திரை மாதம் முழுவதும் பண்டிகை நாட்கள் என்பதால் வெற்றிலை தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் கடந்த வாரத்தை விட ரூ.2 ஆயிரம் அதிகரித்து விற்பனையானது. நேற்று குறைந்தபட்சம் ஒரு மூட்டைக்கு ரூ 6 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ. 16 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    கடத்தூரை சுற்றியுள்ள முத்தனூர், அஸ்த்தகிரியூர், கோம்பை, மதனாபுரி, வெள்ளியங்கரி, கெடகாரஅள்ளி, நத்தமேடு, மோட்டாங்குறிச்சி, காவேரிபுரம், உள்ளிட்ட கிராமங்களில் 100 ஆண்டுகள் பலன் தரக்கூடியது வெற்றிலைகளை தொடர்ந்து பயிர் செய்து வருகின்றனர்.

    ஒரு கவுளிக்கு 55 முதல் 60 வரையிலான வெற்றிலையும், கட்டுக்கு 110 வெற்றிலையும் வைத்து 1 முட்டைக்கு 128 கட்டுகள் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரமாக 14 ஆயிரம் வரை அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்டது.

    நேற்றைய மார்கெட்டில் 2 ஆயிரம் விலை உயர்ந்து 16 ஆயிரமாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது குறித்து முத்தனூரை சேர்ந்த வெற்றிலை விவசாயி வடிவேல் கூறும்போது கடந்த சில மாதத்திற்கு முன் 40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    படிப்படியாக விலை குறைந்து வந்த நிலையில் சில வாரம் குறைவாக விற்றது. இந்த வாரம் சற்று விலை உயர்ந்து விற்பனை செய்யபட்டது. வரும் வாரங்களில் மேலும் விலை உயரும் என எதிர்பார்த்துள்ளோம் என கூறினார்.

    • நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • வெற்றிலை விவசாயத்தை காக்க அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூரை சுற்றியுள்ள தாளநத்தம், வேப்பிலை ப்பட்டி, கேத்தூரெட்டி ப்பட்டி, அய்யம்பட்டி, நொச்சி க்குட்டை, முத்தனூர், கோம்பை, மதுனபுரி, வெள்ளியங்கிரி, ஆஸ்தகிரியூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பல ஆண்டுகள் பலன் தரக்கூடிய இந்த வெற்றிலையை தொடர்ந்து விவசாயிகள் பாதுகாத்து பயிர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெற்றிலை மூட்டை ரூ.35 ஆயிரத்தை தாண்டி விற்பதால் மகிழ்ச்சி தருகிறது என்று கூறும் விவசாயிகள் வெற்றிலை கொடிகள் மறுசுழற்சி செய்ய சுமார் மூன்று மாதங்கள் தேவைப்படுகிறது என்கின்றனர்.

    இதனால் வெற்றிலை உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும் வெற்றிலை தோ ட்டத்திற்கு தேவைப்படும் செம்மண் எடுக்க அரசு அனுமதி கொடுத்தால் இதன் மூலம் கூடுதல் வருவாய் எங்களுக்கு கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் அரசு வெற்றிலை மூட்டைகளுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்என்ற எங்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று வெற்றிலை விவசாயத்தை காக்க அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×