search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறிநாய் தடுப்பூசி"

    • வெறிநாய் தடுப்பூசிகளை நாய்களுக்கு போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்கள் நாய் கடியில் இருந்து தப்புவதற்கு நாய்களை பார்த்தால் உஷாராக ஒதுங்கி செல்வதே நல்லது.

    சென்னை:

    சென்னையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் நடந்து செல்பவர்களை குறிைவத்து பல இடங்களில் தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்த நிலையில் சென்னை ராயபுரம் ஜி.ஏ. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி குழந்தைகள் உள்பட 29 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த அனைவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து 29 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரோட்டில் சென்றவர்களை கடித்து குதறிய வெறிநாயை பொதுமக்களே அடித்து கொன்றனர்.


    இதையடுத்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெறிநாய்கள் மற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் எம்.கே.பி.நகர் பகுதிகளிலும் பொதுமக்களை தெருநாய்கள் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்குட்பட்ட கொடுங்கையூர் எம்.கே.பி.நகர் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், நடந்து சென்ற பெண்கள் என 8 பேரை தெருநாய்கள் கடித்துள்ளன. ஒரே வாரத்தில் அடுத்தடுத்த தெருநாய்கள் பொது மக்களை கடித்துள்ளதால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதேபோன்று சென்னையில் பல இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாகவே பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தெரு நாய்கள் தொல்லை மற்றும் நாய் கடியை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் விலங்குகள் நலவாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து வருகிறோம். அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. பாலூட்டும் நாய்களுக்கும், கர்ப்பமாக இருக்கும் நாய்களுக்கும், நோய்வாய்ப்பட்டிருக்கும் நாய்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்ய முடியாது. அதேநேரத்தில் கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசிகளை நாய்களுக்கு போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள சுமார் 1 லட்சம் நாய்களை பிடித்து தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் சுமார் 900 நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நாய் கடித்ததும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். வெறிநாய்கள் இல்லாத மாநகராக சென்னை மாநகராட்சியை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ள நாய்களின் உடல்களில் உள்ள நோய் கிருமிகளை ஒழிப்பதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில் தான் நாய்களை பிடித்து தடுப்பூசிகளை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு இடத்தில் பிடிக்கும் தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில்தான் கொண்டு விடுகிறோம்.

    எனவே பொதுமக்கள் நாய் கடியில் இருந்து தப்புவதற்கு நாய்களை பார்த்தால் உஷாராக ஒதுங்கி செல்வதே நல்லது. சில நேரங்களில் ரோட்டில் நடந்து செல்பவர்கள் நாய்களை சீண்டுவது உண்டு. அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • செல்ல பிராணிகள் வளர்ப்போரும், பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
    • கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    குண்டடம் :

    குண்டடம் வட்டாரம் பேட்டை , காளி பாளையம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- திருப்பூர் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் ராஷ்ட்ரிய கிருமி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாளை (புதன்கிழமை) குண்டடம் சமுதாய நலக் கூடம் அருகே காலை 9 மணி முதல் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் குழு கலந்து கொண்டு வெறிநாய் தடுப்பூசி போடுதல் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

    இறைச்சிக்கூடங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே செல்ல பிராணிகள் வளர்ப்போரும், பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி முகாம் பல்லடம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திருப்பூர் கால்நடை பராமரிப்பு துறை துணைஇயக்குநர் ராமசாமி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் (பொறுப்பு) வெங்கடேசன், நோய் புலனாய்வு உதவி இயக்குநர் கவுசல்யா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்லடம் கால்நடை மருத்துவர் உமாசங்கர் வரவேற்றார். முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வளர்ப்பு பிராணிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி, நகர மன்ற உறுப்பினர்கள் ராஜசேகர், ஈஸ்வரமூர்த்தி, வசந்தாமணி தங்கவேல், தண்டபாணி, ம.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம்,பல்லடம் அரசு மருத்துவர் ரமேஷ் குமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×