search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வென்னிமலை முருகன் கோவில்"

    • விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
    • திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜர்நகர் வென்னிமலை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதையொட்டி அன்று காலையில் கும்பஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனையும் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று இரவு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாரா தனையும், மாலையில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • சூரசம்ஹாரம் விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை கணபதி ஹோமமும், கொடி யேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனையும், மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • காலை 11 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வென்னிமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம் நடந்தது. இதில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதான ஏற்பாடுகளை கீழப்பாவூர் வட்டார அரிசி ஆலை அதிபர்கள், நெல் அரிசி வியாபாரிகள் மற்றும் தவிடு வியாபாரிகள் செய்திருந்தனர்.

    • காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் முதலாம் நாள் மண்டகப்படி திருவிழா நடத்தப்பட்டது.
    • சுவாமி சன்னதி முன்பு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதில் முதலாம் நாள் மண்டகப்படி திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்டது. உச்சிகால பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் சப்பர ஊர்வலம் நடைபெற்றது. மாலை சுவாமி சன்னதி முன்பு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×