search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரக்குமாரசாமி கோவில்"

    • திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை, துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
    • 19.400 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் உண்டியல் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை, துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.6 லட்சத்து 52 ஆயிரத்து 53 பணம் மற்றும் 37 கிராம் தங்கம், 19.400 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. உண்டியல் திறப்பின் போது இந்து சமய அறநிலையத்துறை காங்கேயம் ஆய்வாளர் சுமதி, வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில் செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    வெள்ளக்கோவில் வீரக்குமாரசாமி கோவில் தேங்காய் பழக்கடை ஒரு ஆண்டிற்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை, திருப்பூர் துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.2023ம் ஆண்டு ஜூலை 1 ந்தேதி முதல் 2024ம் ஆண்டு ஜூன் 30 ந்தேதி வரை தேங்காய் பழம் கடை நடத்தும் உரிமம் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 500 க்கு ஏலம் விடப்பட்டது. அதே போல் கோவில் வளாகத்தில் ஒரு ஆண்டிற்கு சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம் ரூ.19 ஆயிரத்து 500க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை காங்கயம் ஆய்வாளர் சுமதி, வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெற்றது.
    • 48 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டு இருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் உண்டியல் திறப்பு கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் 25ந்தேதிக்கு பிறகு நேற்று வியாழக்கிழமை இந்து சமய அறநிலைய த்துறை திருப்பூர் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் செயல் அலுவலர் ராமநாதன், காங்கயம் ஆய்வாளர் அபிநயா முன்னிலையில் திறக்கப்ப ட்டது. பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை அறநிலைத்துறை பணியா ளர்கள் எண்ணினார்கள்.

    அதில் ரூ.15 லட்சத்து 70 ஆயிரத்து 323 ரொக்கமும், 48 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டு இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

    • தேர்க்கால் பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நிகழ்ச்சி நடை பெற்றது.
    • தேர்த் திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரி தேர் திருவிழா 1-ந் தேதி தொடங்கியது. 19-ந் தேதி சுவாமி திருத்தேருக்கு எழுந்தருள செய்தல், அதை தொடர்ந்து பக்தர்கள், தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். நேற்று முன்தினம் 2-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது, 3-வது நாளான நேற்று மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. பிறகு சுவாமி தேர்க்கால் பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் வரும் மார்ச் மாதம் 6-ந் தேதி வரை கோவில் குலத்தவர்களின் மண்டப கட்டளை நடைபெற உள்ளது. தேர்த் திருவிழா ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்களும், முதன்மைதாரர் நற்பணி மன்றத்தினரும், இந்து சமய அறநிலையத் துறையினரும் செய்திருந்தனர்.

    • கடந்த 1-ந் தேதி காலை தேர் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குலத்தவர்கள் செய்து வருகின்றனர்.

     வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு 3 நாட்களுக்கு தேரோட்டம் நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு 140-வது ஆண்டு மாசி மகா சிவராத்திரி தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

    விழாவையொட்டி கடந்த 1-ந் தேதி காலை தேர் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு மேல் பள்ளய பூஜை நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நாளை 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணிக்கு மேல் அவிட்ட நட்சத்திரத்தில் சாமி திருத்தேருக்கு எழுந்தருளச் செய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் திருத்தேர் நிலைபெயர்த்தல் நிகழ்ச்சி (தேரோட்டம்) நடைபெறுகிறது. 20-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் 2-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 21-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி உள்ளூர் ஆந்தை குலத்தவர்கள், 23-ந் தேதி தனஞ்செயக்குலத்தவர்கள், 24-ந் தேதி மாடகுலத்தவர்கள், 25-ந் தேதி தென்முக ஆந்தை குலத்தவர்கள், 26 -ந் தேதி வடமுக ஆந்தை குலத்தவர்கள், 27-ந் தேதி ஓதாள குலத்தவர்கள், 28-ந் தேதி இலுப்பைக்கிணறு தனஞ்செய குலத்தவர்கள், மார்ச் 1-ந் தேதி கல்லி குலத்தவர்கள், 2-ந் தேதி வண்ணக்கன் குலத்தவர்கள், 3-ந் தேதி நரிப்பழனிகவுண்டர் வகையறா ஆந்தை குலத்தவர்கள், 4-ந் தேதி ஆதிகருப்பன்வலசு நஞ்சப்ப கவுண்டர் வகையறா தனஞ்செய குலத்தவர்கள், 5-ந் தேதி பலிஜவார்கள் குலத்தவர்கள், 6-ந் தேதி திருக்கோவில் முறை பூசாரிகள் மண்ட கட்டளையும் நடக்கிறது. 6-ந் தேதி மஞ்சள் நீர் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. 22-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 13 நாட்கள் குலத்தவர்களின் மண்டப கட்டளைதாரர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கலெகடர், காவல்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் குலத்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குலத்தவர்கள் செய்து வருகின்றனர். தேர்த்திருவிழாவையொட்டி இன்று முதல் 21 -ந் தேதி வரை 4 நாட்களுக்கு தொடர்ந்து இரவு புராண நாடகம், இசை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சி, பட்டிமன்றம் ஆகியன நடைபெற உள்ளன.

    ×