search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு தீப்பிடித்து எரிந்தது"

    • தங்கவேல். இவரது மனைவி சசிகலா ( 40). இருவரும் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
    • நேற்று பகல் சுமார் 12 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கரைப்பாளையம் பகுதி சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சசிகலா ( 40). இருவரும் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று பகல் சுமார் 12 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் குடிசை வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீ மளமள–வென பரவி தீ வேகமாக எரிந்து கொண்டிருந்தது.

    அதனால் தீயை அணைக்க முடியவில்லை .இது குறித்து சசிகலா வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    இருப்பினும் ரூ 3 லட்சம் மதிப்பிலான குடிசை வீட்டுக்குள் இருந்த துணி,மணிகள், உணவுப் பொருட்கள், பாத்திரங்கள், மளிகை சாமான்கள், ஆவணங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின.

    • பண்ருட்டி அருகே மின்கசிவால் கூலித்தொழிலாளி வீடு எரிந்து நாசமாயின.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்கிரையான வீட்டை பார்வையிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே திருவாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி கூலித்தொழிலாளி. இன்று காலை வழக்கமாக வீட்டில் இருந்து அனைவரும் கூலி வேலைக்காக சென்று விட்டனர். அப்போது வீட்டில் எதிர்பாராதமாக மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து ஏரிய தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த தீ மலமல வென பரவி வீடு முழுவதும் எரிந்தது. இதைப் பார்த்த அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்திக்கும், பண்ருட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள், ஜமுனா ராணி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மற்ற வீடுகளுக்கும் பரவாமல் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்தியின் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்கிரையான வீட்டை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×