search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டுப்போட்டி"

    • மொத்தம் 16 பள்ளிகளை சேர்ந்த 1680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசு வழங்கினார்.

    உடுமலை:

    உடுமலை ,மடத்துக்குளம், குடிமங்கலம் ,ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டுப்போட்டிகள் உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் துவங்கியது.

    போட்டிகளை ஆதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார். மொத்தம் 16 பள்ளிகளை சேர்ந்த 1680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசு வழங்கினார்.

    விழாவில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், நகர திமுக .,செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் முபாரக் அலி, நகராட்சி துணை தலைவர் கலைராஜன் .ஒன்றிய திமுக .,செயலாளர் செழியன் ,செந்தில்குமார், மெஞ்ஞானமூர்த்தி, உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன், ஊராட்சி தலைவர்கள் போடி பட்டி சௌந்தர்ராஜ், கணக்கம்பாளையம் காமாட்சி அய்யாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17-ந் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
    • 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஏறி பந்து போட்டியில் பல்லடம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம், மாவட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த விவேகானந்தா பள்ளி மாணவிகள்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ,மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17-ந் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பி.வி.கே.என். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஏறி பந்து போட்டியில் பல்லடம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவிகளை, பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார், நிர்வாக அறங்காவலர் பிரேம் அஸ்வத்,முதல்வர் லவ்லின் ராஜகுமாரி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்.

    ×