உடுமலையில் குறு மைய விளையாட்டுப்போட்டி

மொத்தம் 16 பள்ளிகளை சேர்ந்த 1680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசு வழங்கினார்.
விளையாட்டுப் போட்டியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தக் காட்சி.
விளையாட்டுப் போட்டியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தக் காட்சி.
Published on

உடுமலை:

உடுமலை ,மடத்துக்குளம், குடிமங்கலம் ,ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டுப்போட்டிகள் உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் துவங்கியது.

போட்டிகளை ஆதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார். மொத்தம் 16 பள்ளிகளை சேர்ந்த 1680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசு வழங்கினார்.

விழாவில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், நகர திமுக .,செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் முபாரக் அலி, நகராட்சி துணை தலைவர் கலைராஜன் .ஒன்றிய திமுக .,செயலாளர் செழியன் ,செந்தில்குமார், மெஞ்ஞானமூர்த்தி, உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன், ஊராட்சி தலைவர்கள் போடி பட்டி சௌந்தர்ராஜ், கணக்கம்பாளையம் காமாட்சி அய்யாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com