search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் பிணமாக மீட்பு"

    • சேலம் செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் வலது பகுதியில் சுரங்கபாதை உள்ளது.
    • இன்று காலை இந்த சுரங்க பாதையில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் வலது பகுதியில் சுரங்கபாதை உள்ளது. இன்று காலை இந்த சுரங்க பாதையில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த லாரி டிரைவர்கள் செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர். மேலும் வாலிபர் இறந்து கிடந்த மேம்பாலத்தின் மீது மதுபாட்டில் இருந்தது. இதனால் மேம்பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்தபோது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து இங்கு வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாயமான வாலிபர் ஒட்டாங்குளத்தில் வாலிபர் பிணம் கிடந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் மணிகண்டன் (வயது 35). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வெளியே சென்ற அவர் மாயமானார்.

    அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒட்டாங்குளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின்படி கூடலூர் தெற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர்.

    விசாரணையில் இறந்த நபர் மணிகண்டன் என தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மீன்சுருட்டி அருகே உள்ள தென்னவநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்.
    • வடவாற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தென்னவநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40), தொழிலாளி. இவருடைய மனைவி வேம்பரசி (35). கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயக்குமார் தனது மனைவியிடம் வடவாற்றில் மீன் பிடித்து வருவதாக கூறி சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இது குறித்து வேம்பரசி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இந்தநிலையில் வடவாற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிணமாக மீட்பு இதையடுத்து, மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்தது ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×