search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் மாயமான வாலிபர் பிணமாக மீட்பு
    X

    கோப்பு படம்

    கூடலூரில் மாயமான வாலிபர் பிணமாக மீட்பு

    • மாயமான வாலிபர் ஒட்டாங்குளத்தில் வாலிபர் பிணம் கிடந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் மணிகண்டன் (வயது 35). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வெளியே சென்ற அவர் மாயமானார்.

    அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒட்டாங்குளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின்படி கூடலூர் தெற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர்.

    விசாரணையில் இறந்த நபர் மணிகண்டன் என தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×