search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருடன் ஓட்டம்"

    • பின்னர் வெகுநேரமாகியும் அவர் திரும்பவில்லை.
    • ரூபாவின் தந்தை எனது மகளை செம்மனஅள்ளி பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே பொம்மனூர் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ரூபா (வயது28). இவருக்கு திருமணமாகி குறிஞ்சிமலர் என்ற குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெலமாரனஅள்ளி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று ரூபா தனது குழந்தையுடன் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதனால் அவரை கணவர் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ரூபாவின் தந்தை எனது மகளை செம்மனஅள்ளி பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணை வாலிபரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை.
    • நேற்று அந்த பெண் வீட்டை விட்டு மாயமானார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள ராமர்கூடல் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண். இவரை வாலிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் பெண் பார்க்க வந்துள்ளார்.

    அப்போது பெண்ணை வாலிபரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு, வாலிபரை பிடித்துள்ளது. இதனால் இருவீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த பெண் வீட்டை விட்டு மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் ேதடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அந்த பெண்ணின் தாயார் இண்டூர் போலீசில் எனது மகளை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகம் அடைந்த சீனிவாசன் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்.
    • புகாரில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி உள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் . அவரது மகள் தனம் (வயது 19). முதுநிலை பட்டப்படிப்பு முடித்து உள்ளார். சம்பவத்தன்று காலை தனம் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த சீனிவாசன் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்து ள்ளார். எங்கு தேடியும் தனம் கிடைக்க வில்லை. விசார ணையில் த னம் அதே பகுதியை சேர்ந்த சபாபதியுடன் சென்று இருப்பது தெரியவந்து உள்ளது. சபாபதிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இது குறித்து சீனிவாசன் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி உள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து தனத்தை தேடி வருகிறார்கள்.

    ×