search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைக்குழந்தையுடன் பெண் வாலிபருடன் ஓட்டம்
    X

    கைக்குழந்தையுடன் பெண் வாலிபருடன் ஓட்டம்

    • பின்னர் வெகுநேரமாகியும் அவர் திரும்பவில்லை.
    • ரூபாவின் தந்தை எனது மகளை செம்மனஅள்ளி பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே பொம்மனூர் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ரூபா (வயது28). இவருக்கு திருமணமாகி குறிஞ்சிமலர் என்ற குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெலமாரனஅள்ளி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று ரூபா தனது குழந்தையுடன் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதனால் அவரை கணவர் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ரூபாவின் தந்தை எனது மகளை செம்மனஅள்ளி பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×