search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபரிடம் விசாரணை"

    • பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி வாலிபர்களை ஏமாற்றி வருகிறது.
    • தருமபுரி வாலிபரை அவர்கள் புரோக்கராக பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

    தருமபுரி,

    கடன் வாங்கி தருவது,வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கும் வகையில் வேலை வாங்கித்தருவது என்று ஆசை காட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பல் சமீபத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி வாலிபர்களை ஏமாற்றி வருகிறது.

    அந்த வகையில் பாதிக்க ப்பட்ட ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    செல்போன் செயலி மூலம் ரூ.3,500 கடன் கேட்டேன். அதற்காக அவர்கள் எனது ஆதார் எண், செல்பி போட்டோ ஆகியவை கேட்டனர். அவற்றை அனுப்பி வைத்து நான் கடன் பெற சம்மதித்தேன். செல்போன் செயலி மூலம் வாங்கிய கடனை நான் 7 நாட்களில் ரூ.5 ஆயிரமாக திருப்பி செலுத்தினேன்.

    இருப்பினும் அவர்கள் மேலும் பணம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் உங்களது போட்டோவை மார்பிங் செய்து செல்போன் தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைப்போம் என்று மிரட்டுகின்றனர். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் செயலி மூலம் பெற்ற கடன் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது தெரியவந்தது. அந்தக் வங்கி கணக்கு எண் யாருடையது என்று விசாரித்த போது அது தருமபுரியை சேர்ந்த ஒரு வாலிபரின் வங்கி கணக்கு என்று தெரியவந்தது.

    இதனை அடுத்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தருமபுரி வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வட மாநிலங்களில் இருந்து செயல்படும் இந்த மோசடி கும்பல் வாலிபர்களை குறி வைத்து இது போன்ற மோசடிகளை அரங்கேற்றி வருவதும், தருமபுரி வாலிபரை அவர்கள் புரோக்கராக பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

    இதேபோல மேலும் பல வாலிபர்கள் இந்த மோசடி கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

    எனவே இது போன்ற கடன் வாங்கி தருவது,வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கும் வகையில் வேலை வாங்கித்தருவது என்று ஆசை காட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாலிபர் வரும் சி.சி.டி.வி காட்சிகளை அப்பகுதி மக்கள் ஆய்வு செய்தனர்.
    • வாலிபரை பொதுமக்கள் பிடித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் காடம்பாடி அருகே நேருநகர் பகுதியில் வாலிபர் ஒருவர் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வாகனத்தில் வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து விசாரிக்க அப்பகுதி இளைஞர்களுடன் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த வாலிபர் வரும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க பொது மக்கள் முயற்சி செய்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது மொபட்டில் அந்த வழியாக சென்றார். அப்போது அங்கிருந்த அந்த வாலிபர் அந்த இளம்பெண்ணை வழிமறித்தார்.

    பின்னர் திடீரென அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயற்சி செய்ததார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம்போட்டார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அந்த இளம்பெண் பொதுமக்களிடம் கூறினார்.

    மக்கள் அந்த வாலிபரை பிடிக்க விரைந்தனர். அப்போது சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக ெமாபட்டில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்தான் தனியே வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்த சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் சோமனூரைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகி இருந்ததும் தெரியவந்தது.

    புதுமாப்பிள்ளை குடிபோதையில் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சப்- இன்ஸ்பெக்டர் மனைவி கொலையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகத்தில் இரத்தக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் இறந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தன. பண்ருட்டி காங்கே யன் குப்பத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சதாசிவம் மனைவி மலர்க்கொடி (வயது 54). இவர்களது மகன் சிவகுரு (30). போலீஸ்காரரான இவர் கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பில் தங்கி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார் . நேற்று உடல் நிலை சரியில்லாத மலர்க்கொடி கடலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது மகன் சிவகுரு வீட்டுக்கு சென்றார . பின்னர் மாலை ஆைணக்குப்பத்தில் உள்ள தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி , வெளியே சென்றுள்ளார் . அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை . இதற்கிடையில் ஆனைக்குப்பத்தில் ஏற்க னவே வசித்த பழைய போலீஸ் குடியிருப்பில் மலர்க்கொடி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் .

    அப்போது மலர்க்கொடி முகம் சிதைக்கப்பட்டு இருந்தது . அவரை மர்ம நபர் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது . இருப்பினும் ஒரு காது அறுக்கப்பட்டு , தோடோடு கிடந்தது. மற்றொரு காதில் இருந்த நகையை காணவில்லை. மேலும் தகவல் அறிந்ததும் சிவகுருவும் சம்பவ இடத்துக்கு வந்து , இறந்தது தனது தாய் மலர்க்கொடி தான் என்பதை உறுதி செய்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்கொடி உடலை பார்வையிட்டு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் துணை போலீஸ் கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெ க்டர் குருமூர்த்தி, சப்-இ ன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகிய மூன்று பேர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததிலும் , பொதுமக்களிடம் நடத்திய விசாரணையிலும் , அந்த வழி யாக வாலிபர் ஒருவர் ரத்தக்கறையுடன் நடந்து சென்றது தெரியவந்தது

    . இந்த நிலையில் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை புதுவை மாநிலம் சாராயக்கடையில் இருந்து பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இந்த சம்பவத்திற்கும் அவருக்கும் தொடர்பு உண்டா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு யாராவது இதில் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்பதை குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மலர்கொடி கொலை செய்யப்பட்ட இடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீசார் குடியிருப்பு பகுதி என்பதால் எந்நேரமும் போலீசார் சென்றுவரும் பகுதியில் இந்த கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

    ×