search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வற்புறுத்தல்"

    • நாகூர் அனிபா நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
    • நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சிறுபான்மையினர் நலன் மானிய கோரிக்கை விவாதத்தில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது, இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் நூற்றாண்டு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

    திராவிட இயக்கத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் தன்னுடைய குரலால் அரும்பணியாற்றிய அவருக்கு சிறப்பு செய்யும் வகையில், நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

    நாகூரில் அவருக்கு நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.

    மேலும் நாகூர் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.

    கடனாக வாங்கிய ரூ.20 ஆயிரம் பணத்தை கேட்டு வற்புறுத்தியதால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி (36), கார்த்திகேயன் (35), விக்னேஷ் ஆகியோரிடம் கடனாக மொத்தம் ரூ.20 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சுந்தரமூர்த்தியிடம் கணபதி, கார்த்திகேயன், விக்னேஷ் மூவரும் பணத்தை கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டர். இதுதொடர்பாக அவரது மனைவி கமலி திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கணபதி, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் தலைறைவான விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    ×