search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகூர் அனிபா நூற்றாண்டை அரசு விழா கொண்டாட வேண்டும் - எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    நாகூர் அனிபா.

    நாகூர் அனிபா நூற்றாண்டை அரசு விழா கொண்டாட வேண்டும் - எம்.எல்.ஏ. கோரிக்கை

    • நாகூர் அனிபா நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
    • நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சிறுபான்மையினர் நலன் மானிய கோரிக்கை விவாதத்தில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது, இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் நூற்றாண்டு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

    திராவிட இயக்கத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் தன்னுடைய குரலால் அரும்பணியாற்றிய அவருக்கு சிறப்பு செய்யும் வகையில், நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

    நாகூரில் அவருக்கு நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.

    மேலும் நாகூர் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.

    Next Story
    ×