search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருடாந்திர பவித்ரோற்சவம்"

    • பத்மாவதி தாயார் கோவிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது.
    • ஆஞ்சநேயருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று அதிகாலை சுப்ர பாதத்தில் மூலவர் பத்மாவதி தாயாரை துயிலெழுப்பி சஹஸ்ர நாமார்ச்சனை, காலை 8.30 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவா் பத்மாவதி தாயாரை யாக சாலைக்கு கொண்டு வந்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. உற்சவர் முன்னிலையில் கும்ப ஆவாஹனம், சக்ராதி மண்டல பூஜை, சதுஸ்தான அர்ச்சனை, அக்னி பிரதிஷ்டை, பவித்ர பிரதிஷ்டை நடந்தன.

    அதைத்தொடர்ந்து மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடந்த பவித்ரோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று முன்தினம் காலை சுப்ரபாதம், தோமால சேவை, சகஸ்ர நாமார்ச்சனை நடந்தது. காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமியை கோவிலில் இருந்து யாக சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைதீக காரியக்கர்மங்கள் நடந்தது. காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை திருமஞ்சனம் நடந்தது. பின்னர் மூலவர், உற்சவர்கள், துணை சன்னதிகள், பரிவார தேவதைகளுக்கு விமானப் பிரகாரம், கொடி மரம், பலிபீடம், ஆஞ்சநேயருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    பவித்ரோற்சவத்தின் 3-வது நாளான நேற்று காலை சுப்ரபாதம், தோமால சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன் பிறகு யாகசாலைக்கு உற்சவமூர்த்திகளை கொண்டு வந்து வைதீக காரியக்கர்மங்கள் செய்யப்பட்டன. காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை திருமஞ்சனம், மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை உற்சவமூர்த்திகள் கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு 7.30 மணியில் இருந்து 9.30 மணி வரை கோவிலின் யாக சாலையில் காரியக்கர்மங்கள், பூர்ணாஹுதி நடந்தது. இதோடு பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.

    ×