search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டி பணம்"

    கொடுமுடி அருகே பணத் தகராறில் மூதாட்டியை கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டைபுதூரை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி அருக்காணி (வயது 70). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.

    அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த 10-ந் தேதி அவரது கணவர் முத்துசாமி தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டில் அருக்காணி மட்டும் இருந்தார். 11-ந் தேதி காலை வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை, வாய், மூக்கு பகுதியில் காயம் இருந்தது.

    கட்டிலில் பிணமாக கிடந்த அவரை யாரோ அடித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்த சென்றிருப்பது தெரியவந்தது. தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலையாளியை பிடிக்க கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், பெருந்துறை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் துரைசாமி ஆகி யோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர். கொலையுண்ட அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபுரம் என்ற இடத்தில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் குப்பம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (54) என்பவர் தனது மகன் நவீன்குமாருடன் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    போலீசாரிடம் மாரிமுத்து முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மாரிமுத்துவிடம் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர்.

    அப்போது மூதாட்டி அருக்காணியை கொலை செய்ததாக மாரிமுத்து ஒப் புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    விவசாயியான மாரிமுத்துவுக்கு 1½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலங்களுக்கு மருந்து அடிக்கும் தொழிலையும் மாரிமுத்து செய்து வந்தார்.

    தொழில் செலவுக்காக கடனுக்கு அருக்காணியிடம் மாரிமுத்து பணம் வாங்கி உள்ளாராம். இந்த நிலையில் அவருக்கு மேலும் பணம் தேவைப்பட்டு உள்ளது. எனவே கடந்த 10-ந் தேதி இரவு அருக்காணியின் வீட்டுக்கு மாரிமுத்து சென்றார்.

    அங்கு அருக்காணியிடம் மாரிமுத்து பணம் கேட்டார். ஆனால் பணம் கொடுக்க அருக்காணி மறுத்துள்ளார். ‘‘ஏற்கனவே வாங்கிய பணத்தை கொடு. அப்போதுதான் மீண்டும் பணம் தருவேன்’’ என்று அருக்காணி கூறியுள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மாரி முத்து அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து அருக்காணியை தாக்கி கொலை செய்துள்ளார்.

    பின்னர் அருக்காணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை (தாலிக் கொடி) பறித்துக் கொண்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அருக்காணியின் தாலிக் கொடியில் 4 பவுன் தாலிச் செயினை வங்கியில் மாரிமுத்து அடமானம் வைத்து ரூ. 65 ஆயிரம் பெற்றுள்ளார். தாலியை வீட்டில் வைத்திருந்தார். இந்த தகவல் அறிந்த போலீசார் தாலியையும், தாலிச்செயினையும் கைப்பற்றினர்.

    மூதாட்டி கொலை வழக்கில் கைதாகியுள்ள மாரிமுத்துவுக்கு செல்வி (46) என்ற மனைவியும், நவீன்குமார் என்ற மகனும், மகாலட்சுமி (28), ஆனந்தி (21) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    மகள்களுக்கு திருமணமா கிவிட்டது. நவீன்குமார் சித்தோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.எம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கொடுமுடி அருகே வீட்டில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டை புதூரை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி அருக்காணி (வயது 70).

    இவர்களுக்கு திலகவதி (49), செல்வி (40) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. திலகவதி கரூரிலும், செல்வி சுமைதாங்கி புதூரிலும் வசிக்கிறார்கள்.

    செல்வியின் கணவர் இறந்துவிட்டார். எனவே செல்வி வீட்டில் முத்துசாமி தங்கி உள்ளார். சம்பவத்தன்று அருக்காணியும் அங்கு சென்றிருந்தார். பின்னர் சம்மங்குட்டைபுதூருக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் அருக்காணி பிணமாக கிடந்தார். கட்டிலில் கிடந்த அவரது வாய் பகுதியில் பலத்த காயம் இருந்தது. அதில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.

    அவரை யாரோ அடித்து கொலை செய்துள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பெருந்துறை டி.எஸ்.பி., கொடுமுடி போலீஸ் இன்ஸ் பெக்டர் மணிகண்டன் ஆகி யோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்ததையும், அருக்காணி டி.வி. பார்த்ததையும் சிலர் பார்த்துள்ளனர்.

    டி.வி. காலை 9 மணி வரை ஆப் செய்யப்படவில்லை. இதனால்தான் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது இரவு 10.30 மணிக்கு மேல்தான் யாரோ அருக்காணியை கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    அருக்காணியின் வாய் பகுதியில் கொலையாளி தாக்கியுள்ளார். அந்த தாக்குதலால் அருக்காணியின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பல பற்கள் உடைந்துள்ளன. இதனால் வாய் பகுதியில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.

    முதலில் இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருக்காணி ரத்த வாந்தி எடுத்து இறந்ததாக பேசியுள்ளனர். போலீசார் வந்து பார்த்த பின்னர்தான் வாய் பகுதியில் கொலையாளி தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.

    அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தாராம். சமீபத்தில் 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தனர். அதில் ரூ. 8 லட்சம் பணம் வந்தது. அதில் ரூ. 4 லட்சத்தை மகள்களுக்கு கொடுத்தனர். ரூ. 2 லட்சத்தை உறவினர் ஒருவருக்கு கொடுத்ததாகவும், மீதி பணத்தை வட்டிக்கு கொடுத்ததாகவும் தெரிகிறது.

    எனவே வட்டிக்கு பணம் பெற்றவர்களிடம் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலை நடந்தபோது அருக்காணி சத்தமிட்டுவிடக்கூடாது என்பதற்காக கொலையாளி வாயில் தாக்கினாரா? அல்லது அருக்காணி யாரையாவது திட்டியதால் வாயில் தாக்கப்பட்டாரா? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    அருக்காணி நகை அணிந்திருந்ததாகவும் அந்த நகையை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.சிலர் அருக்காணி நகையை அவ்வப்போது கழற்றி வைத்துவிடுவார் என்றும் கூறுகிறார்கள்.

    எனினும் அந்த நகைக்காக அருக்காணி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×