search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old woman murder"

    • கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
    • மூதாட்டி கொலை குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் அருகே மணி கட்டி பொட்டல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 60). இவர்களது மகன் கோபி (21) ஜான்சன் இறந்து விட்டதால் தாயாரும் மகனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    முத்துலட்சுமி மேலகிருஷ்ணன் புதூர்பகுதியில் உள்ள வலை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் தனது மகனிடம் கடன் பிரச்சினை இருப்பதாக கூறி வருத்தப்பட்டு வந்தார்.

    கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மறுநாள் முத்துலட்சுமி மணிக்கட்டி பொட்டல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் பிணமாக கிடப்பதாக கோபிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோபி சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு பிணமாக கிடந்த தனது தாயார் முத்துலட்சுமியின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இது குறித்து சுசீந்திரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.

    மேலும் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் முத்துலட்சுமியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது மூக்கில் பலத்த காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும் கூறினார்கள்.

    இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலரை பிடித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொடுமுடி அருகே வீட்டில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம் சம்மங்குட்டை புதூரை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி அருக்காணி (வயது 70).

    இவர்களுக்கு திலகவதி (49), செல்வி (40) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. திலகவதி கரூரிலும், செல்வி சுமைதாங்கி புதூரிலும் வசிக்கிறார்கள்.

    செல்வியின் கணவர் இறந்துவிட்டார். எனவே செல்வி வீட்டில் முத்துசாமி தங்கி உள்ளார். சம்பவத்தன்று அருக்காணியும் அங்கு சென்றிருந்தார். பின்னர் சம்மங்குட்டைபுதூருக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் அருக்காணி பிணமாக கிடந்தார். கட்டிலில் கிடந்த அவரது வாய் பகுதியில் பலத்த காயம் இருந்தது. அதில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.

    அவரை யாரோ அடித்து கொலை செய்துள்ளனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பெருந்துறை டி.எஸ்.பி., கொடுமுடி போலீஸ் இன்ஸ் பெக்டர் மணிகண்டன் ஆகி யோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்ததையும், அருக்காணி டி.வி. பார்த்ததையும் சிலர் பார்த்துள்ளனர்.

    டி.வி. காலை 9 மணி வரை ஆப் செய்யப்படவில்லை. இதனால்தான் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது இரவு 10.30 மணிக்கு மேல்தான் யாரோ அருக்காணியை கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    அருக்காணியின் வாய் பகுதியில் கொலையாளி தாக்கியுள்ளார். அந்த தாக்குதலால் அருக்காணியின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பல பற்கள் உடைந்துள்ளன. இதனால் வாய் பகுதியில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.

    முதலில் இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருக்காணி ரத்த வாந்தி எடுத்து இறந்ததாக பேசியுள்ளனர். போலீசார் வந்து பார்த்த பின்னர்தான் வாய் பகுதியில் கொலையாளி தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.

    அருக்காணி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தாராம். சமீபத்தில் 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தனர். அதில் ரூ. 8 லட்சம் பணம் வந்தது. அதில் ரூ. 4 லட்சத்தை மகள்களுக்கு கொடுத்தனர். ரூ. 2 லட்சத்தை உறவினர் ஒருவருக்கு கொடுத்ததாகவும், மீதி பணத்தை வட்டிக்கு கொடுத்ததாகவும் தெரிகிறது.

    எனவே வட்டிக்கு பணம் பெற்றவர்களிடம் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலை நடந்தபோது அருக்காணி சத்தமிட்டுவிடக்கூடாது என்பதற்காக கொலையாளி வாயில் தாக்கினாரா? அல்லது அருக்காணி யாரையாவது திட்டியதால் வாயில் தாக்கப்பட்டாரா? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    அருக்காணி நகை அணிந்திருந்ததாகவும் அந்த நகையை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.சிலர் அருக்காணி நகையை அவ்வப்போது கழற்றி வைத்துவிடுவார் என்றும் கூறுகிறார்கள்.

    எனினும் அந்த நகைக்காக அருக்காணி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×